Header Ads



யாழ் - மண்கும்பான் ஜும்மா பள்ளிவாசல் சபைத்தலைவர் காலமானார்

(பா.சிகான்)

யாழ் மண்கும்பான் ஜும்மா பள்ளிவாசல் பரிபாலன சபைத்தலைவர் செய்யது முஹம்மது புகாரி (வயது-77) என்பவர் இன்று  02-03-2014 காலமானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி இராஜிஉன்.

இவர் கடந்த காலங்களில் வன்செயலால் பாதிப்படைந்திருந்த மேற்படி பள்ளிவாசலை புனரமைத்து அதன் தலைவராக சுமார் 5 வருடங்களிற்கு மேலாக கடமையாற்றியுள்ளார்.

அவரது காலத்தில் குறித்த பள்ளிவாசல் பல விருத்திகளை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

8 பிள்ளைகளின் தந்தையான இவர். சிறிது காலம் நோய் வாய் பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வீடுதிரும்பியிருந்தார்.
இவ்வாறு இருந்த நிலையில் இன்று காலை வபாத் ஆனதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இவரது ஜனாசாவில் அதிகளவாக மக்கள் கலந்த கொண்டிருந்தமையை காணமுடிந்தது.

No comments

Powered by Blogger.