Header Ads



20 வருடங்களாக எறும்புகளுக்கு தீனி போடும் மனிதர்

(India) 20 ஆண்­டு­க­ளாக திரு­வான்­மியூர் – கொட்­டி­வாக்கம் கடற்க­ரையில்,எறும்­புக­ளுக்கு தீனி போட்டு வரு­கிறார் 51 வயது தேவாராம். தின­சரி கடற்­க­ரையில் காலையில் 7:30 மணிக்கு திரு­வான்­மியூர் ஆர்.டி.ஓ சிக்­னலில் இருந்துதிரு­வான்­மியூர் – கொட்­டி­வாக்கம் கடற்­கரை வரை­யுள்ள 2 கி.மீ., துாரம் நடந்து சென்று எறும்­புக்கு தீனி போடு­கிறார்.திரு­வான்­மி­யூரில் அடகு கடை வைத்­துள்ள இவர், எறும்­புக்கு தீனி போடு­வது புண்­ணியம் என்ற அடிப்­ப­டையில் அதை பின்­பற்­று­வ­தா­கவும், அதன் மூலம் மன­நி­றைவு கிடைப்­ப­தா­கவும்கூறு­கிறார். 

எங்கள் சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் பல்லி மாவட்­டத்தில், இந்த பழக்கம் முஸ்­லிம்கள் உட்­பட அனைத்து சமூ­கங்­க­ளி­டமும் இருக்­கி­றது.எறும்புக்கு தீனி போட்டால் புண்­ணியம் என்று ஒரு நம்­பிக்கை. சென்­னைக்கு 12 வயதில், 1978ல் வந்தேன். 1993ம் ஆண்டில் இருந்து எறும்­பு­க­ளுக்குதீனி போட துவங்­கினேன். அப்­போது காலி மனை­க­ளாக இருந்த பகு­திகள், இன்று கட்­ட­டங்­க­ளாக மாறி விட்­டதால் கடற்­க­ரைக்கு சென்று எறும்­புக்கு தீனி போடு­கிறேன்.

எறும்பு தீனியை நீங்­களேதயா­ரிக்­கி­றீர்­களா? வெளியில்வாங்­கு­கி­றீர்­களா?

நானே தயா­ரிக்­கிறேன். மாதா மாதம் 60 கிலோ கம்பு வாங்­கு­கிறேன். அதில் தின­சரி 2 கிலோவை மாவாக அரைத்து கொள்வேன். என் மனைவி,பிள்­ளை­களும் உதவி செய்வர். இதற்கு மாதம் 1,500 ரூபாய் செல­வா­கி­றது.

இந்த செயல் புண்­ணியம் என்றநம்­பிக்கை எப்­படி வந்­தது?மத நம்­பிக்­கையா?
அது எனக்கு தெரி­யாது. ராஜஸ்தான் மாநி­லத்தில் எங்கள் ஊரில் இந்த நம்­பிக்கை உள்­ளது. என்­னு­டைய அப்பா இதை பின்­பற்­றினார். நானும் நம்­பு­கிறேன். மற்­ற­படி, எந்த மத நூலில் இது பற்றி கூறி­யி­ருக்­கி­றது என்று எதுவும் எனக்கு தெரி­யாது. அது தேவை­யு­மில்லை. 

கடந்த 20 ஆண்­டு­களில், இதை ஏன் செய்ய வேண்டும் என, தோன்­றி­ய­துண்டா?
இல்லை. புண்­ணியம் என்ற நம்­பிக்­கையில் இந்த செயலை துவங்­கி­னாலும், இப்­போது இதை ஒரு கட­மை­யா­கவே செய்­கிறேன். இதில் எந்­த­வித பலன்­க­ளையும் எதிர்­பார்க்­க­வில்லை. துன்பம் வந்­தாலும் இந்த செயலை நிறுத்த வேண்டும் என்று நினைத்­த­தில்லை.

அப்­ப­டி­யானால் இந்த பழக்கம், உங்கள் பண்பாட்டுடன் உங்­களை இணைத்து கொள்ளஒரு கரு­வி­யாக பயன்­ப­டு­கி­றதா?
ஆமாம். யாருக்­குமே அவ­ரவர் நம்­பிக்கை கொண்­டுள்ள விஷ­யங்­களை கடைப்­பி­டிப்­பதில் ஒரு திருப்தி ஏற்­படும். எனக்கு என்­னு­டைய பண்பாட்டுடன் வாழ இந்த பழக்கம் ஒரு வாய்ப்­பாக உள்­ளது. சில­ச­மயம் என்­னு­டைய மனை­வியும் ஒன்­றாக இணைந்து தீனி போடுவார். இதில் எனக்கு முழு மன­நி­றைவு கிடைக்­கி­றது.

No comments

Powered by Blogger.