Header Ads



ஐரோப்பாவில் இலங்கைத் தூதரகங்கள் மூடப்படாது - அரசாங்கத்தின் மூத்த அதிகாரி

ஐரோப்பாவில் உள்ள இலங்கை தூதரகங்களை மூட அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் அவ்வாறான தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் வெளிநாட்டு தூதுவராலயங்களின் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் தூதுவராலயங்களை இணைக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆபிரிக்க கண்டத்தில் மூன்று தூதுவராலயங்கள் இயங்கும் அதேவேளை லத்தின் நாடுகளில் இரண்டு தூதுவராலயங்கள் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அரசாங்கம் மேலும் பல நாடுகளில் புதிதாக தூதுவராலயங்களை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.