Header Ads



இளைஞர் சேவைகள் கிழக்கு மாகாண பணிப்பாளராக முதன்முறையாக முஸ்லிம் ஒருவர் நியமனம்.!


(அஸ்லம் எஸ்.மெளலானா)


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஏ. ஹமீர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.


சாய்ந்தமருதில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணக் தலைமைக் காரியாலயத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.


இந்நிகழ்வில் இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.


அம்பாறை மாவட்டம், இறக்காமம் பிரதேசத்தை சேர்ந்த இவர்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முதலாவது முஸ்லிம் அதிகாரி என்பதும் நாடு தழுவிய ரீதியில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாணப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இரண்டாவது முஸ்லிம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.