Header Ads



அம்பாறை மாவட்ட விவசாயிகள் உரிய விலையில் நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை


கிழக்கு மாகானத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் மகா போக நெல் அறுவடை செய்யும் காலத்தில் சீரற்ற காலநிலையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் நெல்லை தனியார்களுக்கு விற்பனை செய்யும் போது குறைந்த விலையில் பெற்றதனால் ஏழை விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர். 


எனவே எதிர்காலத்தில் அம்பாரை மாவட்டத்தில் அமைந்துள்ள நெல் கலஞ்சியசாலைகளில் அல்லது அதனை அண்டிய பகுதிகளில் நெல் உலர்த்தும் இயந்திரங்களை விவசாய அமைச்சின் ஊடாக நிறுவும் பட்சத்தில் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தினை தடுக்கக்கூடியதாக இருக்கும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈட்டினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கௌரவ சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அவர்களின் தலைமையில் பாராளுமன்ற அமர்வு நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை விவசாய பிரதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்

No comments

Powered by Blogger.