Header Ads



மூதூர் விபத்தில் 33 பேர் காயமடைவு


பேருந்தும் ஒன்றும் லொறி ஒன்றும் மோதிக்கொண்ட விபத்தில் 33 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


இந்த விபத்து இன்று (01) மூதூர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


காயமடைந்த 33 பேரில் 18 பேர் பெண்கள் என எமது செய்தியாளர் தெரிவித்தார். 


மினுவங்கொடையிலிருந்து சேருவாவிலயில் உள்ள வில்கம் விஹாரைக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே விபத்தில் சிக்கியுள்ளது.

 

காயமடைந்துள்ளவர்கள் தற்போது மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.