Header Ads



பொன்­விழா காணும் MM ஸுஹைரும் - முஸ்லிம் நாடுகள் எப்படியெல்லாம் இலங்கைக்கு உதவின என்பதற்கான சம்பவமும்...!!


- மின்ஸார் இப்­றாஹீம் -

சாத­னைகள் பல கண்டு வெற்­றி­க­ளையும் விரு­து­க­ளையும் பெற்­றுள்ள ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். ஸுஹைர், சட்­டத்­து­றையில் பிர­வே­சித்து கடந்த 2022 மே 23 ஆம் திக­தி­யுடன் ஐம்­பது வரு­டங்­கள் பூர்த்தி.

சட்டத்துறையில் பொன்­விழா காணும் சட்­டத்­த­ரணி ஸுஹைர், 1972 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி அன்­றைய பிர­தம நீதி­ய­ரசர் எச்.என்.ஜி பெர்­னாண்டோ மற்றும் நீதி­ய­ரசர் சி.பி. வல்­கம்­பாய ஆகியோர் முன்­னி­லையில் சட்­டத்­த­ர­ணி­யாகச் சத்­தியப் பிர­மாணம் செய்து உச்ச நீதி­மன்ற நீதி­மன்­றத்தின் சட்­டத்­த­ர­ணி­யாகத் தனது சட்டச் சேவையை ஆரம்­பித்தார்.

கலா­நிதி கொல்வின் ஆர்.டி. சில்­வா­வினால் வரை­யப்­பட்டு நாட்டின் உயர் சட்­ட­மாக நிலை­பெற்ற இலங்­கையின் முத­லா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பு 1972 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி பிர­க­டனம் செய்­யப்­பட்­டது. இந்த முத­லா­வது குடி­ய­ரசு சட்ட யாப்பின் கீழ் சட்­டத்­த­ர­ணி­க­ளாக சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து கொண்ட முதல் தொகு­தி­யி­ன­ராக உபாலி குண­ரத்­னவும் எம்.எம். ஸுஹைரும் வர­லாற்றில் இடம்­பி­டித்­துள்­ளனர். சட்­டத்­த­ரணி ஸுஹைர், 1968 –- 1970 வரை­யான காலப்­ப­கு­தியின் இலங்கை சட்­டக்­கல்­லூரி பழைய மாண­வ­ராக விளங்­கு­கிறார். அப்­போது காலஞ்­சென்ற ஆசான் ஆர். கே. டபிள்யூ. குண­சே­கர சட்­டக்­கல்­லூ­ரியின் புகழ்­பூத்த அதி­ப­ராக கட­மை­யாற்­றிமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

சட்டக் கல்­லூ­ரிக்­கான பிர­வே­சத்தைப் பெற்­றுக்­கொண்ட போதே ஆசிய அறக்­கட்­டளை நிறு­வனம் வழங்கும் புலமைப் பரி­சி­லையும் சட்­டத்­த­ரணி ஸுஹைர் ­பெற்­றுக் கொண்டார். அந்த உத­வித்­தொகை 1968 முதல் 1970 வரை­யி­லான காலப்­ப­கு­தியில் அவ­ரது சட்டக் கல்­வியை நிறைவு செய்­வ­தற்கு போது­மான முழுச் செல­வையும் உள்­ள­டக்­கி­யி­ருந்­தது. அவர் 1970 இல் சட்டக் கல்­லூரி மாணவர் சங்­கத்தின் ஆசி­ரி­ய­ரா­கவும், சட்டக் கல்­லூ­ரியின் முஸ்லிம் மாணவர் மஜ்லிஸ் தலை­வ­ரா­கவும் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார்.

சட்­டத்­த­ரணி ஸுஹைர், இலங்­கையின் பிர­தம நீதி­ய­ர­ச­ராகப் பணி­யாற்­றிய வழக்­க­றிஞர் எஸ். சர்­வா­னந்தா மற்றும் உச்ச நீதி­மன்ற நீதி­ய­ர­ச­ரான வழக்­க­றிஞர் மெல்கம் பெரேரா ஆகி­யோரின் கீழ் பயி­லு­ந­ராக பயிற்சி பெற்­ற­வ­ராவார்.

அதனைத் தொடர்ந்து சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் அரச வழக்­க­றி­ஞ­ராக 1973 இல் இணைந்து கொண்டார். இவர் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் இணைந்து பணி­யாற்­று­வ­தற்கு தூண்­டு­கோ­லாக அமைந்­தது அவ­ரு­டைய வாதாட்டத் திற­மை­யே­யாகும். ஒரு­முறை சட்­டத்­த­ரணி ஸுஹைர், மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் குற்­ற­வியல் மேன்­மு­றை­யீட்டை அழ­கான முறையில் வாதா­டி­யதை அவ­தா­னித்த சிரேஷ்ட அரச சட்­டத்­த­ரணி பத்­ம­நாதன் இரா­ம­நாதன், சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் இணைந்து பணி­யாற்­று­மாறு ஊக்­கு­வித்தார். அதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இவர் சட்ட மாஅ­திபர் திணைக்­க­ளத்தில் இணைந்து கொண்டார். சிரேஷ்ட சட்­டத்­த­ரணி பி. இரா­ம­நாதன் பிற்­கா­லத்தில் உச்ச நீதி­மன்ற நீதி­ய­ர­ச­ராக பதவி உயர்வு பெற்று ஒய்வு பெற்­றவர் என்­பது தெரிந்­ததே.

சட்­டத்­த­ரணி ஸுஹைர் பத்து வரு­டங்கள் சட்ட மாஅ­திபர் திணைக்­க­ளத்தில் அரச சட்­டத்­த­ர­ணி­யா­கவும் சிரேஷ்ட அரச சட்­டத்­த­ணி­யா­கவும் உயர்வு பெற்று கட­மை­யாற்­றினார். அதில் முதல் ஐந்து வரு­டங்கள் சிவில் வழக்­குகள் தொடர்­பிலும், இரண்­டா­வது ஐந்து வரு­டங்கள் குற்­ற­வியல் வழக்­குகள் தொடர்­பிலும் சேவை­யாற்­றினார். இவர் இலஞ்ச ஊழல் தொடர்­பான வழக்­குகள், கொலை வழக்­குகள் மற்றும் பயங்­க­ர­வாத தடுப்பு வழக்­கு­க­ளுக்­காக உச்ச நீதி­மன்­றத்தில் சிறப்­பாக வழக்­கா­டு­ப­வ­ராக திகழ்ந்தார். அத்­தோடு குற்­ற­வியல் மேல்­மு­றை­யீட்டு வழக்­கு­க­ளிலும் இவர் அரச தரப்பில் ஆஜ­ரானார். சட்­டத்­து­றையில் ஆற்­றிய சேவையின் அடிப்­ப­டையில் இவ­ருக்கு 1981இல் சிரேஷ்ட அரச வழக்­க­றிஞர் பதவி உயர்வு கிடைக்­கப்­பெற்­றது. இருந்தும் கூட 1983 ஜூலை கல­வ­ரத்தைத் தொடர்ந்து சட்ட மாஅ­திபர் திணைக்­க­ளத்தின் பத­வியை இரா­ஜி­நாமா செய்த இவர், சுயா­தீ­ன­மாகப் பணி­யாற்றும் சட்­டத்­த­ர­ணி­யாக சேவை­யாற்றத் தொடங்­கினார்.

சட்­டத்­து­றையில், குறிப்­பாக கிரி­மினல் வழக்­குகள் மற்றும் மேல் நீதி­மன்­றங்­களில் உள்ள சட்ட ஆவ­ணங்­களை வடி­வ­மைப்­ப­திலும் கையாள்­வ­திலும் அவர் ஈடு­பாட்­டுடன் செயற்­பட்டு வந்தார்.

இதற்கு மேல­தி­க­மாக சமூக நலன்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி அன்­றைய முஸ்லிம் தலை­வர்கள் அனை­வ­ரையும் ஒன்­றி­ணைத்த ‘கவுன்ஸில் ஒப் முஸ்லிம்ஸ் ஒப் ஸ்ரீ லங்கா’ என்ற அமைப்பின் ஊடான பணி­க­ளிலும் ஈடு­பட்டார். அந்த வகையில் முன்னாள் ஜனா­தி­பதி மறைந்த ஜே.ஆர் ஜய­வர்­தன தலை­மையில் 1984 இல் நடை­பெற்ற சர்­வ­கட்சி மாநாட்டில் இவர் பங்­கு­பற்­றினார். அத்­தோடு சமூக மேம்­பாட்­டுக்கு உழைக்கும் வகையில் அன்­றைய 17 முஸ்லிம் இளை­ஞர்­ அமைப்­பு­களை ஒன்­றி­ணைத்து ‘பாமிஸ்’ என்ற தொண்டர் அமைப்பின் மூலம் தேசிய மட்­டத்தில் பல்­வேறு சேவை­க­ளையும் முன்­னெ­டுத்தார். இதன் ஊடாக முஸ்­லிம்­களின் குரலை ஒலிக்கச் செய்தார்.

இவ்­வாறு சட்­டத்­து­றை­யிலும் சமூக, அர­சியல் துறை­க­ளிலும் சேவை­யாற்றிக் கொண்­டி­ருந்த சட்­டத்­த­ரணி ஸுஹைர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்­ரஃப்­பினால் முன்­மொ­ழி­யப்­பட்ட தேசியப் பட்­டியல் மூலம் 1994 முதல் 2000 வரை­யான காலப்­ப­கு­தியில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராகப் பதவி வகித்தார். இவர் பல பாரா­ளு­மன்றக் குழுக்­க­ளிலும் சிறப்­பாக பணி­யாற்­றி­யுள்ளார். அது முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தலை­மை­யி­லான ஆட்­சிக்­கா­ல­மாகும்.

இவர் 2001 இல் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யானார். தற்­போதும் உச்ச நீதி­மன்ற மற்றும் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற வழக்­கு­களை எடுத்து நடத்­து­வ­தோடு நாட்டில் உள்ள ஏனைய நீதி­மன்­றங்­க­ளிலும் குற்­ற­வியல் வழக்­குகள், அடிப்­படை உரிமை வழக்­கு­க­ளையும் முன்­னெ­டுத்து வழக்­கா­டு­வதில் செயற்­பட்டு வரு­கிறார். சமூகம் சம்­பந்­தப்­பட்ட விட­யங்­களை ஊட­கங்­க­ளுக்கு தொடர்ந்து கச்­சி­த­மாக எழு­து­வ­திலும் விசேட திறன் கொண்ட வழக்­க­றி­ஞ­ராக இவர் திகழ்­கிறார்.

அதே­நேரம் அப்­போ­தைய ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க, 2001 ஜூலை 23 அன்று ஓய்­வு­பெற்ற பிர­தம நீதி­ய­ரசர் எஸ். சர்­வா­னந்தா தலை­மையில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எஸ்.எஸ். சஹ­பந்து, ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். ஸுஹைர் ஆகி­யோரை உள்­ள­டக்கி, ‘1981–-1984 காலப் பகு­தியில் இடம்­பெற்ற இன வன்­முறை தொடர்­பான உண்­மையை கண்­ட­றியும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு’வை நிய­மித்தார். மேற்­படி ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வா­னது 1983 ஜூலையில் இடம்­பெற்ற சிங்கள-­ தமிழ் கல­வரம், யாழ் பொது நூலகம் எரிக்­கப்­பட்­ட­மைக்­கான பதி­யப்­பட்ட சான்­றுகள் (31.5.1981), யாழ்ப்­பாண மாவட்ட அபி­வி­ருத்தி சபைக்­கான தேர்­தல்கள் (4.06.1981), ஜூலை கல­வ­ரத்­துடன் தொட­ராக இடம்­பெற்று வந்த இனக்­க­ல­வ­ரங்கள் மற்றும் வெலிக்­கடை சிறைச்­சாலை படு­கொ­லைகள் (ஜூலை 25,26, 1983) என பல்­கோ­ணங்­களில் விசா­ர­ண­களை மேற்­கொண்டு அவை பற்­றிய அறிக்கை இல III, 2003 ஆவ­ண­மாக (செசனல் பேப்பர்) அர­சாங்­கத்­தினால் வெளி­யி­டப்­பட்­டது. இந்த ஆணைக்­கு­ழு­விற்கு உத­வி­யாக அரச சட்­டத்­த­ர­ணியும் தற்­போ­தைய உச்ச நீதி­மன்ற நீதி­ய­ர­ச­ரு­மான ஏ.எச்.எம்.டி நவாஸும் எஸ்.எம்.ஜே. சேனா­ரத்­னவும் பணி­யாற்­றினர்.

அதன் பின்னர் 2004 இல் இலங்கை ரூப­வா­ஹினி கூட்­டுத்­தா­ப­னத்தின் (எஸ்.எல்.ஆர்.சி) தலை­வ­ராக நிய­மனம் பெற்ற சட்­டத்­த­ரணி ஸுஹைர் 2006 வரையும் அப்­ப­த­வியில் கட­மை­யாற்­றினார். இதே கால­கட்­டத்தில் கொழும்பு சாஹிரா கல்­லூ­ரியின் ஆளு­னர்கள் சபை தலை­வ­ரா­கவும் அவர் பணி­யாற்­றினார்.

இவ்­வா­றான சூழலில் 2006 இல் அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால், ஈரா­னுக்­கான இலங்கை தூது­வ­ராக நிய­மிக்­கப்­பட்டார். இப்­ப­த­வியை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இவர் மேற்­கொண்ட முயற்­சியின் பய­னாக 2007 டிசம்பர் முதல் இலங்­கைக்கு ஈரான் சலுகை அடிப்­ப­டையில் பெற்­றோ­லி­யத்தை வழங்க ஆரம்­பித்­தது. அதா­வது பெற்­றோ­லி­யத்தைப் பெற்று பயன்­ப­டுத்­திய பின்னர் ஒவ்­வொரு நான்கு மாத காலத்­திற்கு பின்­னரும் அதன் பெறு­ம­தியை மாத்­திரம் செலுத்த வேண்டும். இங்கு வட்­டியோ வேறு எதுவும் கட்­ட­ண­மா­கவோ அற­வி­டப்­ப­ட­வில்லை. அதே­நேரம் இந்த நான்கு மாத சலுகைக் காலம் நிறை­வ­டையும் போது அதனைச் செலுத்தத் தவறும் பட்­சத்தில் மேலும் மூன்று மாத­கால சலுகை சிறிய மேலதிக கட்டணத்துடன் வழங்கப்பட்டு வந்தது. இதன் பயனாக அக் காலப்பகுதியில் 675 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (10 பில்லியன் இலங்கை ரூபாவுக்கு மேல்) இலங்கையில் கையிருப்பில் இருந்து வந்தது.

ஆனாலும் 2012 இல் நாட்டில் (இலங்­கையில்) எழுந்த முஸ்லிம் எதிர்ப்பு பதற்ற நிகழ்­வு­களைத் தொடர்ந்து அவர் தூதுவர் பத­வியை இரா­ஜி­னாமா செய்­து­விட்டு தாயகம் திரும்­பினார். அதனைத் தொடர்ந்து தேசிய சூரா சபையில் உப தலை­வ­ராக இணைந்து முஸ்­லிம்­களின் நலன்­களில் ஈடு­பாடு காட்­டினார். தேசத்­திற்­கா­கவும் சமூ­கத்­திற்­கா­கவும் அய­ராது தொண்­டாற்றி வரும் சட்­டத்­த­ரணி ஸுஹைர், வெலி­கம அரபா மத்­திய கல்­லூரி (1952-–1957), கொழும்பு 9 சென்ட் ஜோன்ஸ் கல்­லூரி (1957-–1962) மற்றும் கொழும்பு சாஹிரா கல்­லூரி (1963-–1965) ஆகி­ய­வற்றின் பழைய மாணவர் ஆவார்.

பொன் விழா காணும் சட்­டத்­த­ரணி ஸுஹைர் அன்று போல் இன்றும் சட்­டத்­து­றையில் தனது அளப்பரிய சேவையை தெடர்ந்து ஆற்றிவருகிறார்.

No comments

Powered by Blogger.