தந்தையினால் 14 வயது மகள் வெட்டிக்கொலை
தொலைபேசி ஒன்று தொடர்பில் நேற்று (30) இரவு ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில், தந்தை தனது மகளைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமியாவார்.
உயிரிழந்த சிறுமிக்கும் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட இந்தத் தர்க்கத்தின் போது, தந்தை மன்னாவால் (கத்தி) தாக்கி இந்தக் கொலையைச் செய்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமியின் சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் உரகஸ்மங்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment