Header Ads



இலங்கையர்களுக்கு 2 மகிழ்ச்சியான தகவல்


வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஓய்வூதியத் திட்டமும் வாக்களிக்கும் பொறிமுறையும் அறிமுகப்படுத்தப்படும் என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.


பொது நிர்வாக அமைச்சின் ஈடுபாட்டுடன் ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தேவையான சட்ட கட்டமைப்பை உருவாக்க ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 40 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வில் இன்று (27) அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.