Header Ads



விபத்தில் சிக்கிய பஸ்ஸின் பதிவு, ரத்துச் செய்யப்பட்டிருந்தது


எல்ல-வெல்லவாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்து, 2023 ஆம் ஆண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் பதிவு, ரத்து செய்யப்பட்டிருந்ததாக பிரதி அமைச்சர் Dr பிரசன்ன குணசேன தெரிவித்தார்.


சுற்றுலாப் பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் பேருந்துகளை ஒழுங்குபடுத்துவதற்கு எவ்வித சட்டங்களும் இதுவரை அறிமுகப்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறினார்.


குறித்த வீதியில் விபத்துகளைக் குறைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.