Header Ads



இன, மத, ஒற்றுமைக்கான அடையாளம் வரலாற்று சிறப்புமிக்க பெலந்த பிரதேசம்

 
- முஹம்மத் நஸ்ரான் -


களுத்­துறை மாவட்டம், அக­ல­வத்தை தேர்தல் தொகுதி, பாலிந்­த­நு­வர பிர­தேச செய­லாளர் பிரிவில் அமைந்­துள்ள பெலந்த கிராமம், வீதிய பண்­டார பெரு­வீரன் வாழ்ந்த வர­லாற்றுச் சிறப்­பு­மிக்க பிர­தே­ச­மாகும்.


இந்தப் புரா­தன நகரம் வர­லாற்று ரீதி­யாக மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்த பிர­தே­ச­மாக காணப்­ப­டு­கின்­றது. வீதிய பண்­டார இலங்கை வர­லாற்றில் ஒரு வீர நாயகன் ஆவார். அவர் ஒரு திற­மை­யான போராளி ஆவார். ஒரு­முறை, போர்த்­து­கீ­சி­யர்­களால் சிறையில் அடைக்­கப்­பட்ட வீதியம் பண்­டார, புத்­தி­சா­லித்­த­ன­மாக சிறை­யி­லி­ருந்து தப்­பித்து பெலந்த பிர­தே­சத்­துக்கு வந்து கோட்­டையை நிர்­மா­ணித்தார். அப்­போது முதல், பெலந்த அவ­ரது கோட்­டை­யாக அமைந்து காணப்­பட்­டது.


வீதிய பண்­டார இள­வ­ர­ச­ரோடு இவ்­வாறு வந்த முஸ்லிம் மக்கள் பெலந்த பிர­தே­சத்தின் பல்­வேறு பகு­தி­களில் குடி­யே­றினர். அவர்­களின் குடி­யி­ருப்­புகள் பெலந்த ஆற்றின் மறு­க­ரையில் அமைந்து காணப்­பட்­டன. இள­வ­ரசர் வீதிய பண்­டா­ர­வுடன் வந்த பெரும்­பா­லான முஸ்­லிம்கள் ஆற்றின் குறுக்கே குடி­யே­றி­யதால் அந்தப் பகு­தி­யில்தான் முதல் முஸ்லிம் பள்­ளி­வாசல் கட்­டப்­பட்­ட­தாக புரா­ணக்­கதைகள் கூறு­கின்­றன. இந்த பள்­ளி­வாசல் முதலில் களி­மண்ணால் கட்­டப்­பட்டு, ஓலை வேயப்­பட்ட கூரையைக் கொண்­ட­மைந்து காணப்­பட்­ட­தோடு, பிற்­பட்ட காலத்தில் அது சிமெந்து கற்­களால் அழ­குத்­தோற்­றத்­தோடு கட்­டப்­பட்­டுள்­ளது. இந்த பள்­ளி­வாசல் களி­மண்ணால் கட்­டப்­பட்டு சமய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டாலும் இதன் சரி­யான காலப்­ப­குதி ஆதா­ர­பூர்­வ­மாக குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. (இதற்கு இரு­நூறு ஆண்­டு­க­ளுக்கும் மேலான வர­லாறு காணப்­ப­டு­கின்­றது.)

களி­மண்ணால் கட்­டப்­பட்ட மிகச் சிறிய பள்­ளி­வா­ச­லி­னது முத­லா­வது நம்­பிக்­கை­யா­ள­ராக அல்ஹாஜ் கபூர் செயற்­பட்டார். அன்­றைய காலத்தில் இந்த பள்­ளி­வா­ச­லுக்கு முன்­பா­கவே பாட­சா­லையும் அமைந்­தி­ருந்­தது. இவ்­வாறு பள்­ளி­வா­சலின் முன் அமைந்­தி­ருந்த பாட­சா­லையை தற்­போ­தைய இடத்­திற்கு இட­மாற்றம் செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளையும் கபூர் அவர்­களே மேற்­கொண்­டுள்ளார். இப்­பா­ட­சா­லையின் முத­லா­வது முஸ்லிம் மாண­வ­ராக முஹம்­மது சாலி திகழ்­கிறார்.


அல்ஹாஜ் கபூ­ருக்குப் பிறகு, ‘தண்டல் அப்பா’ என அழைக்­கப்­பட்ட நைனா மரிக்­காரே பள்­ளி­வா­சலின் நம்­பிக்­கை­யா­ள­ராக செயற்பட்டு வந்­துள்ளார். இவ­ருக்குப் பிறகு, அல்ஹாஜ் ஹனிபா நம்­பிக்­கை­யா­ள­ராக இருந்து இந்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வந்­துள்ளார். அவரைத் தொடர்ந்து அல்ஹாஜ் ஹனிபா அவர்­க­ளி­னது மகன் அல்ஹாஜ் முஸ்­தபா அவர்கள் நம்­பிக்­கை­யா­ள­ராக திகழ்த்தார். மிகுந்த சிர­மத்­துடன் இந்த பள்­ளி­வாசல் செங்­கற்­களால் மீண்டும் கட்­டப்­பட்­ட­தோடு முன் நுழை­வா­யிலும் சிற்­பங்­க­ளுடன் கட்­டப்­பட்­டது.


பின்னர், அல்ஹாஜ் மர்சூக் இந்த பள்­ளி­வா­சலின் நம்­பிக்­கை­யாளர் பொறுப்பை ஏற்­றுக்­கொண்டார். இவ­ரது காலத்தில், புதிய கட்­டி­டத்­திற்­கான அடிக்கல் நாட்­டப்­பட்­டது. பெலந்த பகு­தியில் உள்ள விகாரை மற்றும் பள்­ளி­வா­ச­லுக்கு மின்­சா­ரத்தைப் பெற்றுக் கொள்ளும் நட­வ­டிக்­கையில் இவர் மிகுந்த அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்­டுள்ளார். அப்­போ­தைய அமைச்சர் இம்­தியாஸ் பாக்கீர் மாக்­கா­ருடன் சேர்ந்து, இவரும் பெலந்த ரஜ மகா விஹா­ரையின் தலைமை தேரர் சங்­கைக்­கு­ரிய தேவ­முல்ல கல்­யா­ண­வன்ச அவர்­களும் மின்­சா­ரத்தைப் பெறு­வ­தற்கு பெரும் முயற்­சி­களை மேற்­கொண்­டுள்­ளனர்.


தற்­போது அமைந்­துள்ள பள்­ளி­வா­ச­லோடு சேர்ந்து காணப்­படும் தேயிலைத் தோட்டம் மற்றும் மைய­வாடி காணியை கொள்­வ­னவு செய்­வ­தற்கு அல்ஹாஜ் முஸ்­தபா, அல்ஹாஜ் ஏ.டபிள்யூ. நதீம் மற்றும் அல்ஹாஜ் மௌசூக் ஆகியோர் தனிப்­பட்ட முறையில் அதிக நிதிப் பங்­க­ளிப்­பு­களைச் செய்­துள்­ளனர். மேலும், அல்ஹாஜ் வசுர்தீன் அவர்­களும் தனது சொந்த காணியை பள்­ளி­வா­ச­லுக்கு வக்பு செய்­துள்ளார். அல்ஹாஜ் நதீ­முக்கும் விகா­ரைக்கும் இடை­யி­லான தொடர்பு மூன்று தலை­மு­றை­க­ளாக இன்னும் வலு­வா­கவே காணப்­ப­டு­கின்­றன.


இள­வ­ரசர் வீதிய பண்­டார காலம் முதல் இன்று வரை சிங்­கள – முஸ்­லிம்­க­ளி­டையேயான பரஸ்­பர புரி­தலும் ஒற்­றுமைப் பிணைப்பும் அவ்­வாறே இருந்து வரு­கி­றது. பெரும் சகோ­த­ரத்­துவம் எம்­மத்­தியில் காணப்­ப­டு­கின்­றது. இதற்கு சிறந்த உதா­ரணம் நமது தற்­போ­தைய ராஜ மகா விஹா­ரையின் பிர­தம தேரர் ஆவார். இந்த அற்­பு­த­மான பிணைப்பின் அடை­யா­ள­மாக சங்­கைக்­கு­ரிய தேவ­முல்ல கல்­யா­ண­வன்ச தேரர் திகழ்ந்து வரு­கிறார். அவ­ருக்கு முன் கால­மான பெலந்த பிர­தம தேர­ருடன் பிர­தேச முஸ்லிம் மக்­க­ளி­டையே பெரும் பிணைப்பு காணப்­பட்­டது.


இந்தப் பிணைப்­பினதும் ஒற்­று­மை­யி­னதும் வலி­மை­யால்தான் இன்றும் கூட, நாட்டின் எந்தப் பகுதியிலேனும் இன அல்லது மதப் பிரச்சினைகள் எழுந்தாலும், இக் கிராமத்தில் அத்தகைய பதற்றம் எதுவும் நடக்காமைக்கான காரணமாக அமைந்து காணப்படுகிறது. இக் கிராமத்தில் பேச்சுக்களிலேனும் அல்லது நடத்தைகளிலேனும் எந்த வித முரண்பாடுகளும் காண்பிக்காமைக்கான பிரதான காரணம் இந்த சகோதரத்துவ பிணைப்பாகும். தென்னிலங்கையின் இன மத ஒற்றுமைக்கான அடையாளத்தின் ஆதர்ஷமாக பெலந்த பிரதேசம் இனியும் அமைந்து காணப்பட பிரார்த்திக்கின்றேன்.- Vidivelli

No comments

Powered by Blogger.