Header Ads



ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டாம் - இந்திய அவசர எச்சரிக்கை


அத்தியாவசியமற்ற ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள X பதிவில் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதற்கு முன், கடந்த பல வாரங்களாக ஈரானில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அம்சங்களைக் கருத்தில் கொள்ளுமாறும், சூழ்நிலையை கவனமாக பரிசீலிக்குமாறும் இந்தியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


ஈரானில் என்ன நடக்கிறது என்பதை தொடர்ந்து கண்காணிப்பதோடு, இந்திய அதிகாரிகள் வழங்கிய சமீபத்திய ஆலோசனைகளை பின்பற்றுமாறும் அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


ஏற்கனவே ஈரானில் உள்ள இந்தியர்கள், இங்கிருந்து வெளியேற விரும்பினால் தற்போது கிடைக்கும் வணிக விமான சேவை மற்றும் கப்பல் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.