நாமோ ஏழைகள், இவற்றை எப்படிக் கடைபிடிக்க முடியும்..?
மகனே.. வாழ்க்கையில் 3 விடயங்களை விடாமல் கடைபிடிக்க வேண்டும்.
* மிகச் சிறந்த உணவை உண்ண வேண்டும்
* மிகச் சிறந்த படுக்கையில் தான் உறங்க வேண்டும்
* மிகச்சிறந்த இல்லத்தில் தான் தங்க வேண்டும் என்றார் ஞானாசான்.
நாமோ ஏழைகள். இவற்றை எப்படிக் கடைபிடிக்க முடியும்? எனக் கேட்டான் சீடன்
- பசித்த பிறகே உண்ண வேண்டும். அதுவே மிகச்சிறந்த உணவு
- அதிகம் பணியாற்றிச் சோர்வுடன் உறங்கினால், அப்படுக்கையே சிறந்த படுக்கை
- மக்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வதன் மூலம், அவர்களின் உள்ளத்தில் உனக்கு இடம் கிடைத்தால் அதுவே மிகச்சிறந்த வசிப்பிடம் என்றார் ஞானாசான்.
-Musthafa Qasimi-
https://chat.whatsapp.com/DQWmz6WP7L22D3n0NZ5PQ2
வட்சப்பில் இணைய..

Post a Comment