Header Ads



பாராளுமன்றத்தில் மண்டையான் குழு சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் றிசாத் பதியுதீன் வாய்ச் சண்டை

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கெதிரான பிரேரணை மீதான  சூடான விவாதத்தின் போது சிரேஷ்ட அமைச்சர் டியூ.குணசேகர, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோருக்கிடையில் கடுமையான வாய்ச்சண்டை மூண்டது.

சிரேஷ்ட அமைச்சர் டியூ.குணசேகர ஆவேசமாக பேச அதற்கு பதிலளித்து சுரேஷ் பேசினார். இந்த சந்தர்ப்பத்தில் எழுந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சுரேஷ் எம்.பி.யைப் பார்த்து மிகவும் சத்தமாக ஏதோ கூறவே கோபமடைந்த சுரேஷ் எம்.பி. கையை நீட்டிஆவேசப்பட்டுத் திட்டினார். இதன்போது ஒருவருக்கொருவர் மாறி சாடிக்கொண்டனர்.

மேற்படி பிரேரணை தொடர்பில் சிரேஷ்ட அமைச்சர் டியூ.குணசேகர உரையாற்றிக் கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்தும் பேசினார்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார். இதன்போதே சிரேஷ்ட அமைச்சர் ஆவேசப்பட்டு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார். அவருடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் இணைந்து கொண்டு சத்தமிட்டார்.

இதன்போது முத்தரப்பினருக்கும் இடையில் வாய்ச்சண்டை ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் கடுமையாக சாடிக் கொண்டிருந்தனர்.

குறிப்பு - இலங்கையின் வடக்குப் பகுதியில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்தபோது இந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் முஸ்லிம் இளைஞர்களை பிடித்துச்செல்லும் பிரபல பிள்ளைப்பிடி காரனாக விளங்கியதுடன், படுகொலை செய்யும் சூத்திரதாரியாகவும் விளங்கினார். இதனையடுத்து சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு மண்டையான் குழு என பெயரிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.