பஸ் மோதி 9 எருமை மாடுகள் உயிரிழப்பு
அரன்தலாவ பகுதியில் பஸ் மோதியதில் ஒன்பது எருமை மாடுகள் உயிரிழந்துள்ளன. அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ், எருமை மாடுகள் மீது மோதியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் மேலும் இரண்டு எருமை மாடுகள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பஸ் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
Post a Comment