tag:blogger.com,1999:blog-949029781622113645.post7009056758693950624..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: அலுவலக நேரத்தில் அரச ஊழியர்கள் பேஸ்புக், வட்ஸப் பயன்படுத்தி நேரத்தை வீணடிக்கக் கூடாதுwww.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-23950278620278068362023-01-03T02:57:21.769+01:002023-01-03T02:57:21.769+01:00கடந்த இருபத்திஐந்து வருடங்களாக தொடரும் இந்த அவலத்...கடந்த இருபத்திஐந்து வருடங்களாக தொடரும் இந்த அவலத்தை இப்போதுதான் இந்த உள்நாட்டு அமைச்சின் செயலாளருக்கு விளங்கியிருக்கின்றது. பொதுமக்களின் பணத்தை வீணடிக்கும் இந்த அவலம் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக அரச அலுவலகங்களில் தொடர்கின்றது. அரச பணி புரியும் ஆண்களும் பெண்களும் காரியாலயத்துக்கு வந்தவுடன் காலைச்சாப்பாடு சாப்பிடுவதும் தொடர்ந்து பேஸ்புக், வட்சப் செக் பண்ணுவதும்தான் முதல் வேலை, அது காலை பத்து மணிக்கு மேலும் தொடரும். இனி தேனீர் இடைவேளை அத்துடன் தேனீர் சாலையில் ஊர்பலாயும், தனிநபர் விமர்சனங்களும் தொடரும். இடையில் வருபவர்களுக்கு, பைல் வரவில்லை. கையொப்பமிட தலைவர் இல்லை எனக்கூறிமுடிய பகல் உணவு இடை வௌி. இப்படித்தான் காலத்தை வீணடித்து மாதம் முடிய முன்பு சம்பளத்தை எடுக்கும் பிரயத்தனம். இந்த அவலம் எப்போது நீங்கும் என யாருக்கும் எதுவும் கூறமுடியாது என்ற அளவுக்கு இந்த அநியாயம் சமூகத்தில் புரையோடிப் போய் இருக்கின்றது. அதாவது நாட்டை ஆளும் அரசாங்கம் மோசம். அரச அதிகாரிகளும் பொதுமக்களும் அதைவிட மோசம். இரகசியம் அதுதான். அதனைத் திருத்த ஒவ்வொரு தனிநபரும் திருந்தாவிட்டால் நிலைமை நாளுக்கு நாள் பொருளாதாரத்தைப் போல் மிகவும் மோசமாகிக் கொண்டே போகும்.Voicing for justice & good governance https://www.blogger.com/profile/14740624627548678060noreply@blogger.com