எவராவது தாக்கும்போது கோழைகள் போல் வேடிக்கை பார்க்க தேவையில்ல - சிங்கள ராவய
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் அண்மையில் ஏற்பட்ட மோதல்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், எவராவது தாக்கும்போது கோழைகள் போல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் தேவையில்லை என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார்.
தெஹிவளை சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அளுத்கம புத்தசாசன பாதுகாப்பு அதிகார சபையின் அழைப்பின் பேரிலேயே நாம் அந்த இடத்திற்கு சென்றோம். அயகம சமித தேரர் தனது விகாரைக்கே தர்கா நகர் ஊடாக ஊர்வலமாக சென்றார். முஸ்லிம்களை தூண்டவோ, அவர்கள் மீது தாக்குதல் நடத்தவோ அவர் செல்லவில்லை.
தர்கா நகர் ஊடாக செல்லும் வீதியில் அவரது விகாரை இருக்கின்றது. அந்த வீதியில் செல்லாது எதிர்க்கட்சித் தலைவர் இருக்கும் கறுவாத்தோட்டம் ஊடாகவா நாங்கள் செல்ல வேண்டும்.
நாட்டில் பொறுப்பை வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் போன்ற ஒருவர் விடயங்களை ஆராய்ந்து பார்க்காது அரசியல் லாபத்திற்காக தமது மக்களை காட்டிக் கொடுக்கும் விதமான கருத்துக்களை வெளியிடுவது தவறானது.
தர்கா நகரில் நாங்கள் ஊர்வலமாக செல்லும் போது எம்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதல் நடத்தப்பட்ட போது சிங்கள இளைஞர்கள் எம்முடன் இருக்கவில்லை. இளைஞர்கள் ஊர்வலத்தில் செல்ல அதிரடிப்படையினர் இடமளிக்கவில்லை.
எம்மீது நடத்தப்பட்ட கல் வீச்சு தாக்குதல் மற்றும் துப்பாக்கி பிரயோகம் காரணமாவே இளைஞர்கள் நாங்கள் இருக்கும் இடத்திற்கு ஓடி வந்தனர். அப்போதுதான் மோதல் ஏற்பட்டது. இதுதான் உண்மை எனவும் தயாரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
(3).jpg)
பொய் உரைப்பது இப்போது சில பௌத்த தேரர்களுக்கு fashion ஆகிவிட்டது. அப்படி என்றால் அன்பை போதிக்கும் பௌத்தம் வாழ்க்கைக்கு ஒத்து வராது என்ரா பொருள் சாமியாரே?
ReplyDelete