Header Ads



வரலாற்றில் அதிகூடிய பாடசாலை மாணவர்கள், இன்று பாராளுமன்றம் சென்றனர் (படங்கள்)


நாடாளுமன்ற வரலாற்றில் அதிகூடிய பாடசாலை மாணவர்கள் இன்று -01- நாடாளுமன்றத்திற்கு வருகை தந்ததாக நாடாளுமன்ற கண்காணிப்பாளர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் . 


இதன்படி , நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 32 பாடசாலைகளை சேர்ந்த 5000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்றது . 


கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த நாடாளுமன்றத்தின் பொதுக்கூடம் செப்டெம்பர் 19 ஆம் திகதி முதல் பாடசாலை மாணவர்களுக்காக திறக்கப்பட்டது . 


கடந்த இதனையடுத்து , அண்மைக் காலமாக 25,000 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒன்றுகூடி நாடாளுமன்ற விவாதங்களை பார்வையிடவுள்ளதாக நாடாளுமன்ற கண்காணிப்பாளர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் .







No comments

Powered by Blogger.