Header Ads



முறைகேடாக பயன்படுத்தப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள்


பாராளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


மாலம்பேயில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ குடியிருப்புத் தொகுதியில் உள்ள சில வீடுகள், முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுவதாக பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். 


தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்களில் நீண்ட காலம் தங்கியிருப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.