Header Ads



நெல்லிகல தேரர் விடுத்துள்ள அறிவிப்பு


(ஏ.ஆர்.ஏ.பரீல்)

கூர­கல – தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லையும், அங்கு அமைந்­துள்ள ஸியா­ரத்­தையும் புனர்­நிர்­மாணம் செய்­து­கொள்­ளும்­ப­டியும், அதற்­கான ஒத்­து­ழைப்­பி­னையும், உத­வி­க­ளையும் வழங்­கு­வ­தற்­குத்தான் தயா­ராக இருப்­ப­தா­கவும் கூர­க­லயில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள பெளத்த வழி­பாட்­டுத்­த­லத்­துக்குப் பொறுப்­பான நெல்­லி­க­ல­வத்­து­கும்­புரே தம்­ம­ர­தன தேரர் தெரி­வித்தார்.


எதிர்­வரும் 27 ஆம் திகதி தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலில் இடம்­பெ­ற­வுள்ள கொடி­யேற்ற வைபவம் மற்றும் பள்­ளி­வாசல் விவ­கா­ரங்கள் தொடர்­பாக நெல்­லி­கல தேர­ருக்கும், தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பி­னர்­க­ளுக்­கு­மி­டையில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போதே நெல்­லி­கல தேரர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.


கூர­க­லயில் அமைந்­துள்ள நெல்­லி­க­ல தே­ரரின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் நடை­பெற்ற இந்த கலந்­து­ரை­யா­ட­லின்­போது அவர் மேலும் தெரி­விக்­கையில், தொல்­பொருள் வல­யத்தில் அமைந்­துள்ள பள்­ளி­வாசல் புனர்­நிர்­மா­ணப்­ப­ணி­க­ளுக்கு முழு ஒத்­து­ழைப்­பு­க­ளையும், உத­வி­க­ளையும் என்­னி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொள்ள முடியும். பள்­ளி­வா­சலில் நடை­பெ­ற­வுள்ள கொடி­யேற்ற நிகழ்வு மற்றும் கந்­தூரி வைப­வத்­துக்கும் நானும் எனது மக்­களும் பூரண ஒத்­து­ழைப்­பையும் வழங்­குவோம். இவ்­வா­றான நிகழ்­வு­களில் நாம் ஒன்­று­ப­டு­வதன் மூலம் எமக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்தை பலப்­ப­டுத்திக் கொள்ள முடியும்.


கந்­தூரி வைபவம் மற்றும் கொடி­யேற்ற வைபவம் என்­ப­வற்றில் பங்கு கொள்ள இங்கு வருகை தரும் முஸ்­லிம்கள் கூர­கல பன்­ச­லைக்குச் சொந்­த­மான உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை பயன்­ப­டுத்திக் கொள்ள முடியும் என்றார்.


கலந்துரையாடலில் பள்ளிவாசல் பரிபாலனசபை செயலாளர் அம்ஜட் மெளலானா உட்பட உறுப்பினர்கள் மலீக்ஷா, ஜவுபர் மெளலவி, பாஹிம்,மொஹிதீன் ஆகியோர் பங்கு கொண்டிருந்தனர். – Vidivelli

1 comment:

  1. Don´t trust this man.He talking muslim side one and sinhala side another matters.

    ReplyDelete

Powered by Blogger.