Header Ads



இப்போதும் நாம்தான் நாட்டை ஆட்சி செய்கின்றோம், ராஜபக்சக்கள் வீழ்ந்துவிடவில்லை - மகிந்த


"நாட்டை இப்போதும் நாம் தான் ஆட்சி செய்கின்றோம். எமது கட்சி தான் இப்போதும் நாட்டை ஆள்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் எமது பக்கமே நின்று பணியாற்றுகின்றார் என முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


"இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கு நாட்டை உலுக்கிய கோவிட் பெருந்தொற்றே பிரதான காரணம். இதைப் புரிந்தும் புரியாதவர்கள் போல் எம் மீது சிலர் வசைபாடி புலம்பித்திரிகின்றார்கள்.


நாடு வங்குரோத்து அடைந்தமைக்குக் கோட்டாபய ராஜபக்சவோ அல்லது ராஜபக்சக்களோ காரணம் அல்லர். ராஜபக்சக்கள் வீழ்ந்துவிடவில்லை. அவர்கள் பதவிகளிலிருந்து விலகி நின்று அரசை வழிநடத்துகின்றார்கள் என்பதே உண்மை.


நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்குத் தலைமை தாங்கக்கூடிய - வல்லமை பொருந்திய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான்.அதில் மாற்றுக் கருத்து இல்லை. அவரும் நாங்களும் இணைந்து நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண்போம். இதற்குக் கட்சி, பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். TW

1 comment:

  1. ​சைத்தானின் வாக்குறுதிக்கு இது மிகச் சிறந்த உதாரணம். நாட்டைச் சூறையாடி அழித்து இந்த நாட்டு மக்களைப் பசி பட்டினியில் தள்ளி அவர்களின் தொழில், வாழ்வாதாரத்துக்கு மண்ணை வாரிக் கொட்டிவிட்டு சாகப் போகும் தருவாயிலும் பொதுமக்களுக்கு நம்பிக்கையூட்டும் பாணியில் வம்பளக்கும் இந்த மிகப் பெரிய சைத்தானின் பொய் வாக்குறுதியையும் பொய்களையும் நுணுக்கமாக நோட்டமிடுங்கள். பொய் வாக்குறுதிகளைத் தொடர்ந்தும் கொடுத்துக் கொண்டு மக்களைத் தொடர்ந்தும் வழிகெடுத்தும்இந்த சைத்தானின் கடைசி மூச்சு வரை இந்தப் பாவத்தைத்தான் செய்து கொண்டிருப்பான். இந்த நாட்டில் சோறு சாப்பிடும் மக்களுக்கு இந்த சைத்தானின் பொய்வாக்குறுதி நன்றாகப் புரியும். ஆனால் தொடர்ந்தும் வைக்கோலில் படுத்துறங்கும், வைக்கோலை மூன்று நேரமும் சப்பித்துப்பும் மாக்கள் මහින්ද සරනං කච්හාමි என கத்திக் கொணடு இன்னும் இந்த சைத்தானின் பின்னால் தான் சுற்றித் திரிவான்கள்.

    ReplyDelete

Powered by Blogger.