Header Ads



தமிழர்களையும், முஸ்லிம்களையும் அழிப்பதற்கு முயற்சித்தால் இறுதியில் நீங்களே அழிந்து போவீர்கள்


தமிழர்களையும், முஸ்லிம்களையும் அழிப்பதற்கு முற்சித்தால் இறுதியில் நீங்களே அழிந்து போவீர்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


மேலும், சிங்கள மக்களின் ஆதரவினை மாத்திரமே முழுமையாக எதிர்பார்த்து அரசாங்கம் செயற்படுகிறது.


இந்த கொள்கையை மாற்றிக் கொண்டு பயணிக்க முயற்சிக்காவிட்டால் பாரிய தோல்வியினை அரசாங்கம் சந்திக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.