Header Ads



பல்டி அடிப்பாரா பிரசன்ன ரணதுங்க..?


இதுவரையும் மனச்சாட்சிக்கு உடன்பாடான தீர்மானங்களை மட்டுமே எடுத்ததாகவும் மக்கள் ஆணைக்கு தலைவணங்கி தேவையான நேரத்தில் தேவையான அரசியல் முடிவுகளை எடுப்பதற்கு எப்போதும் பின்நிற்பதில்லை என்றும் தன்மீது இதுவரை நம்பிக்கை வைத்த மக்களை எந்த வகைவகையிலும் மக்களுக்கு துரோகம் செய்வதில்லை என்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் ஆளுங் கட்சியின் பிரதான அமைப்பாளருமான பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார்.


தற்போது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதானது, 'யானை மீது சவாரி செய்வதல்ல' என்று  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மொட்டுக் கட்சியை விட்டு வெளியேறுவதில்லை என்று உறுதிப்படுத்திய   அமைச்சர், மினுவாங்கொடை அரசியல் பேரவையில் இரகசிய வாக்கெடுப்பு ஒன்று நடத்தியது மொட்டுக் கட்சியை விட்டு வெளியேறுவதற்கு அல்ல என்றும் அவர்  சுட்டிக்காட்டினார்.


கடந்த வார இறுதியில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வெளிநாட்டில் இருக்கும் போது அவரது அரசியல் குழு இரகசிய வாக்கெடுப்பை நடத்தியதாகவும், அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையத் தயாராகி வருவதாகவும் பல பத்திரிகைகள் தெரிவித்திருந்தன.


நேற்று (24) காலை நாட்டுக்கு வருகை தந்த பிரசன்ன ரணதுங்க இது தொடர்பில் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளதுடன், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.


“நான் முக்கிய அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்கத் தயாராகி வருவதாகவும், நான் வெளிநாட்டில் இருந்தபோது எனது மினுவாங்கொடை அரசியல் குழு உறுப்பினர்கள் இரகசியமாக வாக்கெடுப்பு நடத்தியதாகவும் கடந்த வார இறுதியில் பத்திரிகைகளிலும் பல இணையத்தளங்களிலும் வெளியான செய்தி தொடர்பில் நான் விசேட கவனம் செலுத்தினேன்.


இந்த இரகசிய வாக்கெடுப்பு கடந்த 20ஆம் திகதி நடைபெற்றது. நான் தனிப்பட்ட பயணமாக வெளிநாட்டில் இருந்த நேரம் அது.


22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மீதான வாக்கெடுப்பின் போது நான் வெளிநாடு சென்றமை தொடர்பில் ஒரு சிலர் குற்றம் சுமத்தியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.


22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு  ஒக்டோபர் 06 மற்றும் 07ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடைபெற இருந்தது. ஜனாதிபதியின் விசேட அறிக்கை மீதான விவாதத்தை அந்த இரு தினங்களில் பாராளுமன்றத்தில் நடத்த கட்சித் தலைவர்கள் தீர்மானித்ததையடுத்து, 22ஆவது அரசியலமைப்புத் திருத்த விவாதத்தையும் வாக்கெடுப்பையும் ஒக்டோபர் 20 மற்றும் 21 ஆகிய இரு தினங்களில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.


எனது வெளிநாட்டு பயணமானது, குறித்த முடிவு எடுக்கப்படுவதற்கு முன் திட்டமிட்ட முடிவிக்கமையவே மேற்கொள்ளப்பட்டது.


ஒக்டோபர் 06, 07 ஆகிய இரு தினங்களில் அதற்கான விவாதமும் வாக்கெடுப்பும் நடத்தப்பட்டால் அதற்குத் தேவையான பங்களிப்பை வழங்க நான் தயாராக இருந்தேன். கட்சித் தலைமைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இந்த விவாதமும் வாக்கெடுப்பும் பிற்போடப்பட்டுள்ள போதிலும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் என்ற வகையில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவைத்தலைவர் ஆகியோருக்கு அறிவித்து அதற்கான பொறுப்பை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் எமது ஆளுங்கட்சியின் பிரதி பிரதம கொறடாவிடம் ஒப்படைத்தேன். இதுவே வழக்கமாக கடைப்பிடிக்கும் நடவடிக்கையாகும். எனது வெளிநாட்டுப் பயணம் ஜனாதிபதியின் அனுமதியுடன் இடம்பெற்றதால், 22ஆவது அரசியலமைப்புத் திருத்த விவாதத்தின் போது நான் வேண்டுமென்றே வெளிநாடு சென்றதாக என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன்.


கடந்த 20ஆம் திகதி மினுவாங்கொடை அரசியல் பீடத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நான் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த இந்த வாக்கெடுப்பு எனது அறிவுறுத்தலின் பேரிலேயே நடத்தப்பட்டது. ஒரு மனச்சாட்சியுள்ள அரசியல்வாதி என்ற வகையில் நாட்டிற்காக அரசியல் தீர்மானம் எடுக்கப்படும் போதெல்லாம் எனது தொகுதியின் அரசியல் பீடத்துடன் கலந்தாலோசித்தே 2015ஆம் ஆண்டு இந்த  நான் 'மஹிந்த காற்று' மேடையில் ஏறினேன். மஹிந்த ராஜபக்‌ஷ  தலைமையில் தனியான அரசியல் கட்சி உருவாக்கப்பட வேண்டும் என்று நான் முதலில் பரிந்துரைத்தேன். மினுவாங்கொடையில் உள்ள இந்த அரசியல் பீடத்திற்கு தெரிந்து தான் இது நடந்தது.  2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இந்த அரசியல் பீடத்துடன் கலந்தாலோசித்து தனித்துப் போட்டியிட வேண்டும் என்று கட்சிக்கு பரிந்துரைத்தேன்.


இந்தக் கட்சிக்காகவும், எங்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்படும் உறுப்பினர்களால் இந்த அரசியல் பீடம்  உருவாக்கப்பட்டது. இதில்  உள்ளூராட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு தொழில் வல்லுநர்கள் உள்ளனர். தற்போதைய அரசியல் குறித்து கிராம மட்டத்தில் உள்ள மக்களின் கருத்தைப் புரிந்துகொள்வது இந்த கருத்துக்கணிப்பின் நோக்கங்களில் ஒன்றாகும்.


நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையின் போது பிரதமர் பதவியை கைப்பற்றுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பல்வேறு தரப்பினரிடம் யோசனை முன்வைத்திருந்த போதிலும், எந்தத் தரப்பும் அதை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சவாலை ஏற்றுக்கொண்டார்.


மொட்டு கட்சி அதற்கு பூரண ஆதரவை தெரிவித்தது.  நான் மாவட்டத் தலைவராக இருந்த பொஹொட்டுவவில் இருந்து ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் பின்னர் ஜனாதிபதியாகவும் ஆனார். அல்லது எனது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன். ஆனால் அந்த தருணத்தில் அது குறித்து கட்சி உறுப்பினர்களிடம் கருத்து கேட்கவில்லை. அதற்குக் காரணம் அப்போது நாட்டில் நிலவிய நிலைமை. இதனால் அன்றைய தினம் நாம் செய்தது சரிதானா என்று பொதுமக்களின் கருத்தை கேட்க வேண்டிய தேவையும் எனக்கு ஏற்பட்டது. அதுவே மினுவாங்கொடை அரசியல் பீடத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கான மற்றைய காரணம். இந்த கருத்துக்கணிப்பு எந்த வகையிலும் ஸ்ரீலங்கா பொதுஜன  முன்னணியினுடைய கருத்துக் கணிப்பு அல்ல.


நேற்று (24) காலை நாடு திரும்பிய  எனக்கு உரிய வாக்களிப்பு முடிவுகள் கிடைத்துள்ளதுடன், இந்த தருணத்தில் தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட வேண்டும் என இந்த அரசியல் பீடத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியின் காலை வாராமல் அவர்  முன்னெடுக்கும் அனைத்து வேலைத்திட்டத்திற்கும்  ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடாகும்.


இன்று எமது நாடு நாட்டிற்கு நெருக்கடியான காலகட்டத்தை கடந்து வருகின்றது. நாட்டில் நிலவும் பொருளாதார, சமூக நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நாம் செய்ய வேண்டியது வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வதோ அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்வதோ அல்ல. தற்போதைய  சூழ்நிலையில் நாட்டை மீட்டெடுக்க நமது ஆதரவை வழங்க வேண்டும்.


இந்த தருணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பது 'யானை மீது சவாரி செய்வது' அல்ல. இது மொட்டைக் கைவிடுவதும் அல்ல. மக்கள் கருத்தைப் பாதுகாக்க இந்த நேரத்தில் எடுக்கக்கூடிய மற்றும் எடுக்கப்பட வேண்டிய சிறந்த முடிவு. எனவே மினுவாங்கொடை அரசியல் பீடத்தின் கருத்துக்குப் பணிந்து தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எனது பூரண ஆதரவை தொடர்ந்தும் தெரிவித்துக் கொள்கிறேன். அதற்காக எந்த சவாலையும் ஏற்க தயாராக இருக்கிறேன் என்று இங்கு  வலியுறுத்துகிறேன்.


நாட்டின் நலனுக்காக நான் எப்போதும் சரியான அரசியல் முடிவுகளை எடுத்துள்ளேன், என்னை நம்பிய கம்பஹா மக்களுக்கு துரோகம் செய்ய நான் ஒருபோதும் தயாராக இல்லை. என் மீது வைத்திருந்த நம்பிக்கையை கடுகளவேனும்  உடைக்க அவர்கள் தயாராக இல்லை. எனினும், மக்கள் கருத்துக்கு அடிபணிந்து தேவையான அரசியல் முடிவை தயக்கமின்றி எடுக்க நான் தயார் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். இது வேறு எதனாலும் அல்ல, எல்லாவற்றிற்கும் மேலாக, எனது நாடும் மக்களும் எனக்கு பெறுமதியானது என்பதனாலேயே.

No comments

Powered by Blogger.