Header Ads



இலங்­கையின் முத­ல்­ சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்சையை செய்த பேராசிரியர் ரிஸ்வி ஷெரீபுக்கு சிறுநீரக அறுவைச்சிகிச்சை - வைத்தியசாலையில் குவிந்த நிபுணர்கள்


இலங்­கையில் ‘சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்­சையின் தந்தை’ என அழைக்­கப்­படும் பேரா­சி­ரியர் றிஸ்வி ஷெரீ­பிற்கு அண்­மையில் சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்­சை­யொன்று மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.


இந்த அறுவை சிகிச்­சை­யினை மேற்­கொள்­வ­தற்கு உல­க­ளா­விய ரீதியில் பிர­பல்யம் பெற்ற பல சர்­வ­தேச மற்றும் உள்ளூர் நிலை­யங்கள் காணப்­பட்ட போதிலும், பொர­ளை­யி­லுள்ள தனது சொந்த வைத்­தி­ய­சா­லை­யான வெஸ்டர்ன் ஹொஸ்­பி­ட­லி­லேயே அவர் இந்த சந்­தி­ர­சி­கிச்­சை­யினை மேற்­கொண்­டுள்ளார்.


இலங்­கையின் முத­லா­வது சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்சை, பேரா­சி­ரியர் றிஸ்வி ஷெரீ­பினால் 1985ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. கொழும்பு பல்­க­லைக்­க­ழக மருத்­துவ பீடத்தின் உத­வி­யுடன் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த அறுவை சிகிச்­சைக்கு போரா­சி­ரி­யர்­க­ளான ஏ.எச்.ஷெரீப்தீன் மற்றும் ஹெரி ஜெய­சே­கர ஆகி­யோரும் பங்­க­ளிப்புச் செய்­துள்­ளனர்.


முன்­னொரு காலப் பகு­தியில் இந்த அறுவை சிகிச்­சைக்­காக பல மில்­லியன் ரூபா செல­வ­ளித்து இந்­தியா செல்ல வேண்­டி­யி­ருந்­தது. எனினும், பேரா­சி­ரியர் றிஸ்வி ஷெரீ­பினால் இந்த அறுவை சிகிச்சை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டதை அடுத்து, நாட்­டி­லேயே இந்த அறுவை சிகிச்­சை­யினை மேற்­கொள்ள முடிந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.


எழு­பத்தி மூன்று வய­தான பேரா­சி­ரி­ய­ருக்கு நீர­ிழிவு, உயர் இரத்த அழுத்தம் உள்­ளிட்ட பல நோய்கள் காணப்­பட்­ட­மை­யினால் இந்த அறுவை சிகிச்­சை­யினை அவருக்கு மேற்­கொள்­வ­து அதிக ஆபத்­தானது என்று கருத்­தப்­பட்டது. இந்­நி­லை­யிலும் மிகுந்த நம்­பிக்­கை­யூடன் அவர் இந்த அறுவை சிகிச்­சை­யினை முகங்­கொ­டுத்­தி­ருந்தார்.


நாட்­டி­லுள்ள மிகவும் அனு­பவம் வாய்ந்த சிரேஷ்ட வைத்­தி­யர்கள் பலரின் வழி­காட்­டலில் வைத்­தியர் சூலா ஹேரத் தலை­மை­யி­லான சிறு­நீ­ரக விசேட வைத்­திய நிபு­ணர்­களைக் கொண்ட குழு­வி­னரால் சிறு­நீ­ரக அறுவை சிகிச்­சையும், கராப்­பிட்­டிய போதனா வைத்­தி­ய­சா­லையின் சத்­திர சிகிச்சை நிபுணர் ரஞ்­சுக உப­ய­சி­ரி தலை­மை­யி­லான குழு­வி­ன­ரினால் சத்­திர சிகிச்­சையும் பேரா­சி­ரியர் றிஸ்வி ஷெரீ­பிற்கு மேற்­கொள்­ளப்­பட்­டது.

இதற்கு மேல­தி­க­மாக இந்த அறுவை சிகிச்சை வெற்­றி­க­ர­மாக நடை­பெற பேரா­சி­ரி­யரின் மக­ளான ஸ்ரீ ஜய­வர்த்­த­ன­புர போதனா வைத்­தி­ய­சா­லையின் சிறு­நீ­ரக அறுவை சிகி­சிச்சை பிரிவின் சிரேஷ்ட வைத்­திய அதி­கா­ரி­யான ஹபீபா ஷெரீப் செயற்­பட்­டுள்ளார்.


எழு­பத்தி மூன்று வய­தான பேரா­சி­ரி­ய­ருக்கு நீர­ிழிவு, உயர் இரத்த அழுத்தம் உள்­ளிட்ட பல நோய்கள் காணப்­பட்­ட­மை­யினால் இந்த அறுவை சிகிச்­சை­யினை அவருக்கு மேற்­கொள்­வ­து அதிக ஆபத்­தானது என்று கருத்­தப்­பட்டது. இந்­நி­லை­யிலும் மிகுந்த நம்­பிக்­கை­யூடன் அவர் இந்த அறுவை சிகிச்­சை­யினை முகங்­கொ­டுத்­தி­ருந்தார்.


அவ­ருக்கு உத­வி­யாக பேரா­சி­ரி­யரின் புதல்­வர்­க­ளான வெஸ்டர்ன் ஹொஸ்­பி­டலின் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யான வைத்­தியர் ஒமர் ஷெரீப் மற்றும் அங்­கொ­ட­யி­லுள்ள தேசிய மன­நல நிறு­வ­னத்தின் சிரேஷ்ட வைத்­திய அதி­காரி றிகாஷ் ஷெரீப் ஆகி­யோரும் செயற்­பட்­டுள்­ளனர்.


பேரா­சி­ரி­யரின் சத்­திர சிகிச்சை வெற்­றி­க­ர­மாக நடை­பெற வேண்டி பள்­ளி­வா­சல்கள், விகா­ரைகள், கோயில்கள் மற்றும் தேவா­ல­யங்­களில் விசேட சமய வழி­பா­டு­களும் இடம்­பெற்­றுள்­ளன.


அத்­துடன், அநாதை இல்­லங்­க­ளுக்கு உதவி செய்தல், கோயில்கள் மற்றும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அரு­கி­லுள்ள ஏழை­க­ளுக்கு உண­வ­ளித்தல் போன்ற பல தொண்டு செயற்­பா­டு­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.


இதே­வேளை, இந்த சத்­தி­ர­சி­கிச்சை மிகவும் வெற்­றி­க­ர­மாக நடை­பெ­று­வ­தற்­காக உழைத்த அனை­வ­ருக்கும் பேரா­சி­ரியர் றிஸ்வி ஷெரீப் மிக்க நன்­றி­களை தெரி­வித்­துள்ளார்.

“வெஸ்டர்ன் ஹொஸ்­பிடல் என்­னு­டை­ய­தாக இருந்­தாலும், நாட்டில் சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்­சை­யினை மேற்­கொள்­வ­தற்கு இந்த வைத்­தி­ய­சாலை சிறந்ததும் பாதுகாப்பானதும் என தயக்கமின்றி கூறிக்கொள்கின்றேன்” என்றார் பேராசிரியர்.

இந்த அறுவை சிகிச்­சை­யி­லி­ருந்து விரை­வாக குண­ம­டைந்த பின்னர் சேர் ஜோன் கொத்­த­லா­வல பாது­காப்பு பல்­க­லைக்­க­ழ­கத்தில் சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்­பான நிகழ்ச்­சி­யொன்றை ஆரம்­பிக்­க­வுள்­ள­தாக அவர் மேலும் குறிப்பிட்டார். –Vidivelli

நன்றி: சன்டே டைம்ஸ்

தமிழில்: றிப்தி அலி


No comments

Powered by Blogger.