Header Ads



உணவுப் பொருள் என்றிருந்த, டின்களில் 13 கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருள்


26 வயதான வெளிநாட்டு  யுவதி ஒருவர், 13 கோடி ரூபாய் பெறுமதியான 2.5 கிலோகிராம் ஹொக்கெய்ன் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


பிரேஸிலில் இருந்து கட்டார் சென்றுள்ள குறித்த யுவதி, அங்கிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.


அவரின் சந்தேகத்துக்குரிய நடத்தை காரணமாக, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது பயணப் பொதியில் உணவுப் பொருள் என்று குறிப்பிடப்பட்டிருந்த டின்களில் ஹொக்கெய்ன் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.


யுவதியையும் மீட்கப்பட்ட ஹொக்கெய்னையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைத்துள்ளதாக சுங்க பிரிவினர் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.