Header Ads



CID இல் வாக்குமூலம் வழங்கச்சென்ற பெண் தற்கொலை


நிதி மோசடி தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வந்த பெண் ஒருவர் கட்டடத்தின் 5ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்ட பெண் ஒருவர் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தார்.

பன்னிபிட்டி பகுதியைச் சேர்ந்த அப்சரா மெனிக்கே என்ற 46 வயதான குறித்த பெண்ணே இவ்வாறு நேற்று(10) உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண் இராஜகிரிய, அங்கொட மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளில் வெவ்வேறு சங்கங்களை ஆரம்பித்து 6 கோடியே 83 இலட்சத்து 40 ஆயிரம்  ரூபா மோசடியில் ஈடுபட்டுள்ளதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவர் காவல்துறையினரை ஏமாற்றி வெவ்வேறு பெயர்களில் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவரது சடலம் தற்போது காவல்துறை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு மரண பரிசோதனைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன. 

No comments

Powered by Blogger.