Header Ads



கட்டாரில் அஜித் - இருநாட்டு நிதி உறவுகள் குறித்து பேச்சு


மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கட்டாருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதுடன், அவர் அந்நாட்டின் புதிய மத்திய வங்கி ஆளுநர் ஷேக் பந்தார் பின் மொஹமட் பின் சௌத் அல்தானியை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இரு தரப்பினருக்கும் நன்மை கிடைக்கும் நடவடிக்கைகள் மற்றும் இருதரப்பு நிதி உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் இந்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்தது.

1 comment:

  1. கதார் நாட்டின் எந்தவித அழைப்புகளும் இன்றி, கதாரின் மத்திய வங்கி கவர்னரைச் சந்திந்து அந்த நாட்டின் நிதிநிலைமையைச் சீர் செய்ய அவசரமாக இலங்கை மத்திய வங்கி கவர்னர் கதார் சென்றுள்ளார்.

    ReplyDelete

Powered by Blogger.