Header Ads



எதிர்காலத்தில் மைத்திரிபால தன்னைத்தானே, தாக்கிக் கொள்ளக் கூடும் - ரணில்


முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவைப் பற்றி பேசியுள்ளார்.

வானொலிற்கு  வழங்கிய நேர்காணலின் போதே அவர் மைத்திரியை பற்றி தெரிவித்துள்ளார்.

சிறிசேன அரச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ஐக்கிய தேசிய முன்னணிக்கு நன்றி தெரிவித்ததாகவும் ஆனால் 2020ல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு (SLPP) ஆதரவாக ஐக்கிய தேசிய முன்னணியை தாக்கத் தொடங்கியதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் கூறினார்.

முன்னாள் அரசதலைவர் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை தாக்க ஆரம்பித்துள்ளார் என தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, எதிர்காலத்தில் சிறிசேன தன்னைத் தானே தாக்கிக் கொள்ளக் கூடும் எனவும் தெரிவித்தார். 

1 comment:

  1. உண்மை க்கு உண்மை யான முனாபிக் ரணில் என்பதை இதிலிருந்து பச்சை பாலனுக்கு ம் விளங்கும். மர்ஹும் அஷ்ரப் அவர்கள் அன்று சொன்னது இன்னும் பொய்க்க வில்லை. ஆனால் தற்போதய நம்ம தான்தோன்றி தலைமை களுக்கு மட்டுமே இது இன்னும் விளங்கவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.