Header Ads



இலங்கை நிரு­வாக சேவையின் விஷேட தரத்­திற்கு பதவி உயர்த்­தப்­பட்­டுள்ள ABM அஷ்ரப்


முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பா­ளரும் தலை­மைத்­துவ மேம்­பாட்­டுக்­கான தேசிய நிலை­யத்தின் பணிப்­பா­ள­ரு­மா­கிய ஏ.பீ.எம். அஷ்ரப், இலங்கை நிரு­வாக சேவையின் விஷேட தரத்­திற்கு 01.07.2021 திகதி முதல் பதவி உயர்த்­தப்­பட்­டுள்ளார்.

1998 மார்ச் 2ஆம் திகதி இலங்கை நிரு­வாக சேவையின் மூன்றாம் தர உத்­தி­யோ­கத்­த­ராக உள்­வாங்­கப்­பட்ட அஷ்ரப், 1995 -– 96ஆம் வரு­டங்­களில் நடை­பெற்ற அகில இலங்கை மட்­டத்­தி­லான இலங்கை நிரு­வாக சேவைக்­கான போட்டிப் பரீட்­சையில் மூன்­றா­வது இடத்தைப் பெற்றுக் கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

1998ஆம் ஆண்டு முதல் கடந்த 24 வரு­டங்­களில் பொலிஸ் திணைக்­களம், ஓய்வூ­தியத் திணைக்­களம், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம், வனாத்­த­வில்­லுவ, புத்­தளம் மற்றும் கிண்­ணியா ஆகிய பிர­தேச செய­ல­கங்கள், துறை­முக அபி­வி­ருத்தி மற்றும் புனர்­வாழ்வு அமைச்சு, பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சு, இலங்கை அபி­வி­ருத்தி நிரு­வாக நிறு­வகம் ஆகி­ய­வற்றில் சேவை­யாற்­றி­யுள்ளார். ஓய்­வூ­திய திணைக்­களம், கிண்­ணியா பிர­தேச செய­லகம் மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஆகி­ய­வற்­றி­னூ­டாக இவர் ஆற்­றிய சேவைகள் நன்­க­றி­யப்­பட்­ட­வை­யாகும். மேலும் உலக வங்கி நிதி­யு­த­வியில் வடக்கு, கிழக்கு உள்­ளூ­ராட்சி சபை­க­ளி­னூ­டாக 200 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் (40000 மில்­லியன் ரூபாய்) பெறு­ம­தி­யான உட்­கட்­ட­மைப்புத் திட்­டங்­களை வரை­வ­திலும் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­திலும் இவர் சிறந்த பங்­க­ளிப்பை வழங்­கி­யுள்ளார்.

ஜாமிஆ நளீ­மி­யாவில் 1987–94 காலப்­ப­கு­தியில் கற்று முதல் தரத்தில் சித்­தி­யெய்தி அங்கு விரி­வு­ரை­யா­ள­ர­ாகவும் கட­மை­யாற்­றி­யுள்ள அஷ்ரப், பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் வெளி­வாரிப் பட்­ட­தா­ரி­யு­மாவார். சுமார் 13000 மாண­வர்கள் தோற்­றிய இப்­ப­ரீட்­சையில் முத­லா­மி­டத்தில் சித்­தி­யெய்­தி­ய­தோடு (Second upper) வகுப்பும் பெற்­றுள்ளார். மேலும் கொழும்பு பல்­க­லை­க­்க­ழ­கத்தில் 2009–11 இல் MBA பட்­டமும் பெற்­றுள்ளார்.

இஹல கொட்­டி­யாவ முஸ்லிம் வித்­தி­யா­ல­யத்தில் 7 ஆம் வகுப்பு வரை கற்று பின் அனு­ரா­த­புரம் ஸாஹிரா கல்­லூ­ரியில் கல்விப் பொதுத்­த­ரா­தர சாதா­ரண தரப்­ப­ரீட்சையில் முதல்­நிலை மாண­வ­ராக தேறி­யதும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இவர் அனு­ரா­த­புர மாவட்­டத்தில் இஹல கொட்­டி­யாவ என்ற குக்­கி­ரா­மத்தின் ஆதம்­பாவா– ஹபீலா உம்மா தம்­ப­தி­யரின் மக­னாவார்.

இலங்கை நிரு­வாக சேவையில் பல முஸ்லிம் உத்­தி­யோத்­தர்கள் விஷேட தரத்தில் பத­வி­யு­யர்வு பெற்­றி­ருந்­தாலும் விஷேட தரத்திற்குரிய பதவிகளான மாவட்ட அரசாங்க அதிபர், மாகாண பிரதம செயலாளர், இராஜாங்க அமைச்சு செயலாளர், அமைச்சு செயலாளர், A தர திணைக்களத் தலைவர் போன்ற பதவிகள் எதுவும் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் எவருக்கும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli

No comments

Powered by Blogger.