அதிவேக நெடுஞ்சாலை வருமானம் ரூபா 8.8 பில்லியன்
கடந்த ஆண்டு அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக 8.8 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை ஈட்டப்பட்டுள்ளது.
ஆண்டொன்றில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினூடாக ஈட்டப்பட்ட அதிக தொகை இதுவென தெரிவிக்கப்படுகின்றது. 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு வருவாய் 21 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்திரம் கடந்த ஆண்டு 4.5 பில்லியன் ரூபா ஈட்டப்பட்டுள்ளது.
Post a Comment