Header Ads



மனைவியுடன் திருப்பதிக்கு சென்றார் பிரதமர் - VIP தரிசனத்தில் லட்டு, சாமி படம், பிரசாதங்கள் வழங்கப்படும்


இலங்கை பிரதமர் ராஜபக்ஷ, இன்று மதியம் 12 மணியளவில் திருப்பதிக்கு வந்தார். விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்த அவரை சித்தூர் கலெக்டர் ஹரி நாராயணன் மற்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர்.

திருமலையில் உள்ள கிருஷ்ணா நிவாஸ் விருந்தினர் மாளிகையில் இரவு ஓய்வெடுக்கிறார். நாளை வெள்ளிக்கிழமை காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் லட்டு, சாமி படம் மற்றும் பிரசாதங்கள் வழங்குகின்றனர்.

பின்னர் மீண்டும் விமானம் மூலம் இலங்கை செல்கிறார். இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வருகையையொட்டி திருப்பதி மற்றும் திருமலையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.