Header Ads



டொலர் கேட்டு, இஸ்லாமிய நாடுகளுக்கு பறக்கவுள்ள பிரதமர் - முஸ்லிம் Mp க்களும் இணையவுள்ளனர்


நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அமெ­ரிக்க டொலர் நெருக்­க­டிக்கு உதவி கோரும் நோக்கில் பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ, அடுத்த வருட முற்­ப­கு­தியில் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்­கான விஜ­ய­மொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக நம்­பத்­த­குந்த வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

சவூதி அரே­பியா உள்­ளிட்ட சில நாடு­க­ளுக்கே இந்த விஜ­யத்­தினை மேற்­கொண்டு அந்­நா­டு­களின் தலை­வர்­க­ளுடன் பிர­தமர் பேச்சு நடத்­த­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

பிர­த­மரின் இந்த விஜ­யத்தில் 20ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு ஆத­ரவு வழங்­கிய முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இது தொடர்பில் 20ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு ஆத­ரவு வழங்­கிய முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அரச தரப்பின் உயர் மட்­டத்­தி­ன­ருக்கும் இடையில் முக்­கிய பேச்­சு­வார்த்­தை­யொன்று அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது.

இதே­வேளை, அமெ­ரிக்க டொலர் நெருக்­கடி தொடர்பில் பேச்சு நடத்­து­வ­தற்­காக மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு வலு­சக்தி அமைச்சர் உதய கம்­மன்­பில மற்றும் மத்­திய வங்­கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் கடந்த சில மாதங்­க­ளுக்கு முன் தனித்­தனி விஜ­யங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

இவ்­வா­றான நிலையில், மத்­திய வங்­கியின் உயர் மட்­டக்­கு­ழு­வொன்று இந்த வாரம் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்­கான விஜ­ய­மொன்றை மேற்­கொண்­டுள்­ளது. கட்டார், ஐக்­கிய அரபு இராச்­சியம் மற்றும் சவூதி அரே­பியா ஆகிய நாடு­க­ளுக்கே இந்த குழு விஜயம் செய்து முக்­கிய பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­ப­ட­வுள்­ளது.

இக்­கு­ழுவின் சவூ­திக்­கான விஜ­யத்தில் மத்­திய வங்­கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்­ராலும் இணையவுள்ளார். இந்த தூதுக்­கு­ழுவின் விஜ­யத்­தினை தொடர்ந்தே பிர­த­மரின் மத்­திய கிழக்­கிற்­கான விஜயம் இடம்­பெறும் எனத் தெரி­ய­வ­ரு­கின்­றது,

கடந்த மார்ச் மாதம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷிற்கு மேற்கொண்ட விசேட விஜயத்தினை அடுத்து, 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனை இலங்கைக்கு அந்நாடு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

(றிப்தி அலி)


1 comment:

  1. பிச்சைக்காரனுக்கு பணக்காரன் பிச்சை போடமாட்டான் என்பது உலகறிந்த உண்மை. இந்த சாதாரண உண்மையைக்கூட புரியாத புரிய விரும்பாத இனவெறியும்,முஸ்லிம்களின் துரோகியுமான பெரிய பிச்சைக்காரன் தான் யார் என்பதை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாகத் தீயிட்டு எரித்த பிச்சைக்காரன் யார் என்பதை உலகமும் குறிப்பாக உலக முஸ்லிம்களும் தற்போது நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர்.நாட்டில் எஞ்சியிருக்கும் டொலர் சொச்சங்களுக்கும் மண்ணைவாரிக் கொட்டிவிட்டு பிச்சைக்கூட்டம் திரும்பிவரும்.

    ReplyDelete

Powered by Blogger.