Header Ads



இம்ரான்கானின் செயற்பாடுகளுக்கும் முயற்சிகளுக்கும், பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கிறோம் - சஜித்


கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவிற்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கும் முகமாக பாகிஸ்தான் பிரதமர் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கும் முயற்சிகளுக்கும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வதோடு இந்த துயரச் சம்பவத்தை நியாயப்படுத்துவதற்கு முற்படுகின்ற பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சருக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிக்கின்றார். 

அனுவமும் முதிர்ச்சியும் மிக்க அரசியல் தலைவராக பாகிஸ்தான் பிரதமர் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற அதேவேளை அதற்கு முற்றிலும் மாற்றமான முறையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் செயற்படுகின்றமை கவலைக்குரியதாக உள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகின்றார். 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற சசுனட அருண வேலைத்திட்டத்தின் ஊடாக அம்பலாந்தோட்டை உடபெரகம புண்ணியவர்தனாராம விகாரையில் இயங்கும் ஸ்ரீ பேமானந்த அறநெறிப் பாடசாலையில் நிர்மானிக்கப்பட்ட கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இன்று இடம்பெற்றது.

ஹம்பாந்தோட்டை லுனுகம்வெஹர பிரதான அமைப்பாளர் மற்றும் திஸ்ஸமஹாராம இணை அமைப்பாளரும் தென் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான தென்னகோன் நிலமே அம்பலாந்தோட்டை சூரியவெவ அமைப்பாளர் டி.வி.கே காமினி, லுனுகம்வெஹர மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேச இணைப்புச் செயலாளர் ரங்க ரங்ஹொடி, ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அதேவேளை திஸ்ஸமஹாராம பிரதான அமைப்பாளர் லால் சந்திரவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

No comments

Powered by Blogger.