Header Ads



அந்நியச் செலாவணி நெருக்கடி, உம்ரா யாத்திரை ஏற்பாடுகளை நிறுத்த முகவர்கள் தீர்மானம் - எவரிடமும் கட்டணம் செலுத்த வேண்டாமென கோரிக்கை


(ஏ.ஆர்.ஏ.பரீல்)

நாட்டில் நிலவும் அந்­நியச் செலா­வணி நெருக்­கடி நிலை­மை­க­ளுக்கு மத்­தியில் ஹஜ் முக­வர்கள் சங்­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முக­வர்கள் உம்ரா யாத்­திரை ஏற்­பா­டு­களை நிறுத்தி வைத்­துள்­ள­தாக ஹஜ் முக­வர்கள் சங்­கத்தின் தலைவர் எம்.ஜி.எம்.ஹிஷாம் தெரி­வித்­துள்ளார். அத்துடன் பொது மக்கள் உம்ரா யாத்­தி­ரைக்­காக எவ­ரி­டமும் கட்­டணம் செலுத்த வேண்­டா­மெனவும் அவர் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

மேலும் அரச ஹஜ் குழுவும், கலா­சார அமைச்சும், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் அடுத்த வருட ஹஜ் யாத்­தி­ரையை இலங்­கை­யர்­க­ளுக்குப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார்.

முக­வர்கள் இர­க­சி­ய­மாக உம்ரா ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தாக தெரி­விக்­கப்­படும் பிர­சா­ரங்­க­ளுக்­கு­ப­தி­ல­ளிக்கும் வகையில் ‘விடி­வெள்­ளி’க்கு விளக்­க­ம­ளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில்; இந்த வருட உம்ரா ஏற்­பா­டு­க­ளுக்­கான விதி­மு­றை­க­ளின்­படி IATA சான்­றிதழ் பெற்­றி­ருக்கும் முக­வர்கள் சவூதி அரே­பிய முவர்­களைத் தொடர்பு கொண்டு உடன்­ப­டிக்­கை­யொன்றில் கைச்சாத்­தி­டலாம். அந்த உடன்­ப­டிக்கை சவூ­தியில் உள்ள இலங்கை கொன்­சி­யூலர் நாய­கத்­தி­னா­ல் சிபா­ரிசு செய்­யப்­பட்டு பின்பு இலங்­கையில் வெளி­நாட்­ட­மைச்சு,சவூ­தி­தூ­த­ரகம் என்­ப­வற்­றினால் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.

உடன்­ப­டிக்கை சவூதி ஹஜ் அமைச்­சுக்கு வழங்­கப்­பட்­டதும் மேல­திக நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும். வங்­கி­க­ணக்­கி­லக்­க­மொன்­றினை சவூதி ஹஜ் அமைச்சு வழங்கும். அந்த கணக்­கி­லக்­கத்­துக்கு இலங்கை வங்­கி­யூ­டாக பணம் அனுப்ப முடியும். எல்லா கொடுப்­ப­ன­வு­களும் வழங்­கப்­பட்ட பின்பு உம்ரா விசா வழங்­கப்­படும். IBAN கணக்கு ஊடாக பணம் அனுப்பி வைக்­கப்­படும். இது சட்­ட­பூர்­வ­மா­ன­தாகும்.

இந்­ந­டை­மு­றையின் கீழ் IATA உள்­ள­வர்­க­ளுக்கு உம்ரா யாத்­தி­ரைக்கு மக்­களை அனுப்ப முடியும். இந்த வகை­யிலே IATA சான்­றிதழ் பெற்­றுள்ள சில முக­வர்கள் உம்ரா ஏற்­பா­டு­களைச் செய்­துள்­ளனர்.

அத்­தோடு இரண்டு இலட்சம் சவூதி ரியால் வங்கி உறுதி சவூதி அரே­பி­யாவின் முவர்­க­ளா­லேயே சவூதி வங்­கிக்கு வழங்­கப்­ப­டு­கி­றது.

IATA சான்­றிதழ் பெற்­றுள்ள ஓரி­ரு­வரே இந்த ஏற்­பா­டு­களைச் செய்­துள்­ளனர்.இந்­நி­லையில் ஹஜ் முக­வர்கள் சங்­கத்­தின்­உ­றுப்­பி­னர்கள் உம்ரா ஏற்­பா­டு­களைச் செய்­வ­தில்லை என ஏக­ம­ன­தாக தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. உம்ரா யாத்­தி­ரைக்­காக எவ­ரி­டமும் முற்­பணம் செலுத்த வேண்டாம் என கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கி­றது. இதுவே சங்­கத்­தின்­தீர்­மா­ன­மாகும் எனவும் ஹிஷாம் கூறினார்.

மக்கள் இரண்டு வரு­ட­மாக ஹஜ் கட­மையை மேற்­கொள்ள முடி­யா­தி­ருக்­கின்­றனர். எனவே அடுத்த வருட ஹஜ் கோட்­டாவை அரச ஹஜ் குழு பெற்­றுத்­தர வேண்டும். இதற்கு திணைக்­க­ளமும் ஒத்­து­ழைக்க வேண்டும் என்றார்.

நாட்டின் அந்­நிய செலா­வணி நெருக்­கடி நிலை­மை­யினை கருத்­திற்­கொண்டு அர­சுக்கு ஒத்­து­ழைப்பு வழங்கும் நோக்­கு­டனே ஹஜ் முக­வர்கள் சங்கம் உம்ரா ஏற்­பா­டு­களை இடை­நி­றுத்­தி­யுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

இதே­வேளை மஹிந்த ராஜபக்ஷ எதிர்­வரும் ஹஜ் யாத்­தி­ரைக்கு அதி­க­மான ஹஜ் கோட்­டாக்­களைப் பெற்றுத் தரு­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்ய வேண்டும். நோன்பு ஏப்ரல் 3 ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் இரண்டு மாதங்களின் பின் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளப்படவுள்ளது என்பதனை கருத்திற்கொண்டு சவூதி அரேபியாவின் கொவிட் 19 சட்ட திட்டங்களைப் பேணி யாத்திரையை மேற்கொள்ள அனுமதி பெற்றுக்கொள்ளப்படவேண்டுமென ஹஜ் முகவர்கள் சங்கத்தின் இணைத் தலைவர்களான எம்.ஆர்.எம்.பாரூக் மற்றும் அஹமட் நிஜார் விடிவெள்ளிக்குத் தெரிவித்தனர். – Vidivelli

No comments

Powered by Blogger.