Header Ads



ராஜாங்க அமைச்சருக்கு மக்கள் காண்பித்த எதிர்ப்பு - உணவருந்த முடியாமல் மனைவியுடன் திரும்பினார்


கொழும்பு நகரின் புறநகர் பகுதியான தலவத்துகொட பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபலமான ஆடம்பர உணவகத்திற்கு சென்றிருந்த அரசாங்கத்தின் முக்கிய ராஜாங்க அமைச்சர் ஒருவர், மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக பயணித்த காரை இடைநடுவில் நிறுத்தி திரும்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

ராஜாங்க அமைச்சர் எதிர்பாராத வகையில் மக்களின் இந்த எதிர்ப்பை சந்தித்துள்ளார். குறித்த உணவகத்தில் நேற்றிரவு 9 மணியளவில் அதிகளவிலான சாதாரண மக்கள் இரவு உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

இதன் போது இரவு 10.20 அளவில் அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்தற்ற முக்கிய ராஜாங்க அமைச்சர் ஒருவர் தனது மனைவியுடன் இரவு உணவை உண்பதற்காக உணவகத்திற்கு சென்றுள்ளார்.

இந்த அமைச்சர் தனது மனைவியுடன் உணவகத்தின் உணவு அருந்தும் பகுதிக்குள் சென்றதை கண்ட அங்கிருந்த மக்கள் திடீரென பல்வேறு கேள்வி கணைகளை தொடுக்க ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

எந்த வகையிலும் எதிர்பாராதபடி தொடர்ந்தும் மக்கள் கேள்வி கணைகளை தொடுத்தன் காரணமாக அமைச்சர் உணவு இரவை உண்ணாது மனைவியை அழைத்து கொண்டு உணவகத்தில் இருந்து வெளியேறி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. TW

No comments

Powered by Blogger.