Header Ads



போதைக்கு அடிமையான இளைஞன், தனது கழுத்தை வெட்டிக்கொண்டு உயிரிழப்பு - கொச்சிக்கடை பொலிஸ் பிரிவில் சம்பவம்


- Ismathul Rahuman -  

   போதைப் பொருளுக்கு அடிமையான இளைஞன் ஒருவன் தனது கழுத்தை கத்தியால்  வெட்டிக்கொண்டு உயிர்நீத்துள்ளார்.

  கொச்சிக்கடை பொலிஸ் பிரிவில்  போரதொட்டையில் நடந்த இச் சம்பவம் தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவிக்கையில்  போதைப்பொருளுக்கு பழக்கப்பட்டு அடிமையின இளைஞன் சனிக்கிழமை (25) மாலை 5 மணியளவில் வீட்டில் சமயலறையில் உள்ள மீன் வெட்டும் கத்தியை எடுத்து தனது கழுத்தில் வைத்து இருபக்கமாக இழுத்துள்ளார். இதனை தடுப்பதற்காக   முற்பட்டபோதும் எவருக்கு அருகாமையில் வருவதை குறித்த இளைஞன் தடுத்துள்ளார். 

   படுகாயமடைந்த இளைஞனை நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் போது மரணமடைந்துள்ளார். 

போரத்தொட்ட,  தக்கியா வீதியைச் சேர்ந்த   27 வயது இளைஞனே இவ்வாறு பரிதாபகரமாக உயிர் நீத்துள்ளார்.

  பிரேத பரிசோதனைக்காக சடலம் பிசிஆர் பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டுள்ளது.  பிசிஆர் பரிசோதனையின் முடிவின் பின் இன்று திங்கட்கிழமை  பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.   சடலம் நீர்கொழும்பு வைத்தியசலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

    கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிறீனிக்க ஜயகொடி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை நடாத்துகின்றனர்.


No comments

Powered by Blogger.