Header Ads



பிரியந்தவின் அதிர்ச்சிகர பிரதே பரிசோதனை அறிக்கை வெளியாகியது - குடும்பத்துக்கு நட்டஈடு வழங்க பாகிஸ்தான் நடவடிக்கை - உடல் நாளை நாட்டுக்கு வருகிறது


பிரியந்த குமாரவின் மரணத்தி;ன் பின்னர் இடம்பெற்ற பிரதேபரிசோதனைகள் மூலம் அவர் கொல்லப்பட்டமை குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரின் தலைமீது பாரிய தாக்குதல் இடம்பெற்றுள்ளது-அவரது உடலை தீயிட்டுக்கொழுத்துவதற்கு முன்னர் அவரது கைகால்களை முற்றாக சேதப்படுத்தியுள்ளனர்.

அவரது தலையில் பல தொடர்ச்சியான தாக்குதல்கள் இடம்பெற்றன மூளைவரை அது சென்றதால் மரணம் நிகழ்ந்தது என பிரேதபரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறை கும்பல் அவரது கைகால்களை முற்றாக அடித்துநொருக்கிவிட்டது என பிரதேசபரிசோதனை அறிக்கையை மேற்கோள்காட்டி சாமா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அவரது திசுக்களில் 99 வீதமானவை எரிகாயம் மற்றும் காயங்களால் சேதமாகிவிட்டன  காலின் அடிப்பகுதி தவிர உடலின் அனைத்து பாகங்களும் எரிந்துவிட்டன என பிரதேபரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியந்தவின் உடலை இலங்கை தூதரகத்திடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சியல்கொட் நகரில் கொல்லப்பட்ட இலங்கையரின் குடும்பத்துக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாட் செளத்ரி தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் - சியல்கொட் நகரில் மத நிந்தனை என்ற பெயரில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இருந்தார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இரு நாடுகளும் இதற்கு கண்டனம் வெளியிட்டதுடன், மேலதிக நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.

நாளை திங்கட்கிழமை அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.