புத்தளத்தில் களம் இறங்கியுள்ள வெளிநாட்டுப் பறவைகள்
புத்தளம் மாவட்டத்தில் தற்போது வெளிநாட்டு பறவைகள் சஞ்சரிக்கின்றன.
புத்தளம் மாவட்டத்தில் தற்போது அதிக குளிரான காலநிலை நிலவுகின்றது.
இதனால் வெளிநாட்டு பறவைகள் முந்தல் சிறுகடலை அண்டிய பல பகுதிகளில் சஞ்சரிக்கின்றன.
முந்தல் சிறுகடலை அண்டிய பகுதிகளில் கண்டல் தாவரங்களும் மீன்களும் காணப்படுவதால், அவற்றைத் தேடி பறவைகள் வருகின்றன.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இந்த வெளிநாட்டு பறவைகள் வெகுவாக ஈர்த்துள்ளன.
Post a Comment