ஹெல்மட் அணிந்து சமைக்கும் பெண்
நாட்டில் தற்போது தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் எரிவாயு அடுப்புகள் திடீர் திடீரென வெடிப்பதால் மக்கள் பெரும் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக இந்த திடீர் வெடிப்பால் இல்லத்தரசிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் சில இல்லத்தரசிகள் எரிவாயு அடுப்பில் சமையல் செய்யும் போது பாதுகாப்பு ஹெல்மெட் அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
பலபிட்டிய வட்டுகெதர பிரதேசத்தில் உள்ள இல்லத்தரசி ஒருவர் பாதுகாப்பு கவசம் அணிந்து எரிவாயு அடுப்பில் சமைப்பதை புகைப்படம் காட்டுகிறது.
Post a Comment