Header Ads



இன்று பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை


பாகிஸ்தான் - சியால்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை இன்று (08) நடைபெறவுள்ளது. 

அவரது பூதவுடல் நேற்று (07) கனேமுல்லையிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். 

மத நிந்தனை என்ற பெயரில் சியால்கோட்டிலுள்ள தொழிற்சாலை ஒன்றின் பொது முகாமையாளரான பிரியந்த குமார சித்திரவதை செய்யப்பட்டு  எரித்து கொலை செய்யப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் (06) பிற்பகல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் இவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

உயிரிழந்த பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடும் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று  இறுதிக் கிரியை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.