Header Ads



சஹ்ரானின் பயிற்சி முகாமில் பங்கேற்றவர் கைது - பொலிசார் தெரிவிப்பு


ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுடன் தொடர்பை பேணிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவனெல்ல – ஹிங்குல பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் சஹ்ரான் ஹாசிமினால் நடத்திச் செல்லப்பட்ட பயிற்சி முகாமில் பயிற்சிகளை சந்தேகநபர் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.