நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நபர்கள் - மத்திய வங்கியின் ஆளுநர் குமுறல்
பொருளாதாரம் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வரும் பல்வேறு தரப்பினர் நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal ) தெரிவித்துள்ளார்.
கடன் தவணை செலுத்துவதற்கும் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கும் நாட்டில் பண கையிருப்பு இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை எதிர்க்கொண்டுள்ள அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை சுதந்திரமாக நிர்ணயம் செய்ய அனுமதிப்பது உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டின் பொருளாதாரம் பற்றி பச்சைப் பொய்களைப் பரப்பும் பொல்லாத நபர் இவர்தான். இவரைப்பொருத்தவரை சட்டம் சரியாகச் செயற்பட்டால் பொருளாதாரம் சீராகும்.
ReplyDelete