Header Ads



60 அமைச்சர்கள், Mp க்களும் விடுமுறைக்காக வெளிநாடு செல்லத்தயார் - மனைவியுடன் பறந்தார் பசில்


சுமார் 60 அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வருட இறுதி விடுமுறையை கழிப்பதற்கு வெளிநாடுகளுக்கு செல்ல தயாராகி வருகின்றனர் என பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடு செல்ல தயாராகும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து,அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழும் மற்றும் படிக்கும் தமது பிள்ளைகளைப் பார்க்க, விடுமுறை நாட்களில் அந்த நாடுகளுக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் மற்றுமொரு குழு, தமது விடுமுறையை நுவரெலியாவில் கழிக்க திட்டமிட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வெடுப்பதற்காக அமைக்கப்பட்ட ஜெனரல் ஹவுஸ் என்ற  விடுதியில் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2

நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, தனது மனைவியுடன் டுபாய்க்கு பயணமாகியுள்ளார். தனிப்பட்ட விஜயத்தை அவர் மேற்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.


2 comments:

  1. டுபாய் யாருக்கெல்லாம் இடம் வழங்கி வருகிறது என்பது இன்னும் பலருக்கு புரிந்து புரிந்து ம் புரிவதில்லை.

    ReplyDelete
  2. you all enjoy from peoples hard earned money. excellent politicians.

    ReplyDelete

Powered by Blogger.