Header Ads



6 கோடி ரூபா வெளிநாட்டு நாணயங்களுடன், டுபாய் செல்ல முயற்சித்த 7 இலங்கையர்கள் கைது


டுபாய் நோக்கிப் பயணிக்க முயற்சித்த 7 இலங்கையர்கள் சுங்க போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று(24) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து அமெரிக்க டொலர், யூரோ மற்றும் ஸ்ரேலிங் பவுன் என்பன கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பிரிவின் பேச்சாளர் சுதந்த சில்வா தெரிவித்தார்.

இவ்வாறு சுமார் 6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்களுடன் கைதாகி உள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

No comments

Powered by Blogger.