ஈஸ்டர் தாக்குதல் சந்தேக கைதிகளுக்கும், வேறு கைதிகளுக்கும் மோதல் - 5 பேர் காயம்
பதுளை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மோதல் சம்பவம் நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 5 கைதிகள் காயமடைந்து, பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலருக்கும், வேறு சில கைதிகளுக்கும் இடையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment