Header Ads



இலங்கையில் புதிதாக 41 பேருக்கு ஒமிக்ரோன்


இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்றைய தினம் புதிதாக 41 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை, மூலக்கூறு பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார்.

இதன்படி, இலங்கையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.