Header Ads



3 வாரங்களில் ஒமைக்ரொன் வேகமாக பரலவாம் - நாடு துரதிஷ்ட நிலைமைக்கு உள்ளாவதை தடுப்பதற்கு மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்


எதிர்வரும் மூன்று வாரங்களில், இலங்கையில் வேகமாக பரவும் கொவிட் திரிபாக ஒமைக்ரொன் காணப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன் தலைவர் உபுல் ரோஹன இன்று (23) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், நேற்று (22) புதிதாக இனங்காணப்பட்ட 3 தொற்றாளர்கள் உட்பட இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள 7 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் தொடர்பான ஆய்வின் மூலம் இது தெளிவாகிறது என சுட்டிக்காட்டினார். 

எதிர்காலத்தில் நாடு மிகவும் துரதிஷ்டவசமான நிலைமைக்கு உள்ளாவதை தடுப்பதற்கு பண்டிகைக் காலங்களில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.


No comments

Powered by Blogger.