Header Ads



அக்குறணையில் 2 சமையல் எரிவாயு அடுப்புகள் வெடிப்பு


- மொஹொமட் ஆஸிக் -

அக்குறணை பிரதேசத்தில் நேற்று (08) இரண்டு சமையல் எரிவாயு  அடுப்புகள் வெடித்துள்ளதாக அலவத்துகொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அக்குறணை- தெழும்புகஹவத்தை பிரதேசத்திலும் பானகமுவ பிரதேசத்திலும் இவ் இரு சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அதன் காரணமாக எவருக்கும்  காயங்கள் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாலை வேளையில் வெடித்துள்ளதுடன் ,தெழும்புகஹவத்தையில் வெடித்த அடுப்பு அணைக்கப்பட்டிருந்த நிலையில் ​வெடித்துள்ளது.

இது தொடர்பில் அலவத்துகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


1 comment:

  1. இது ஒரு புதினமான செய்தியாக இருக்கின்றது. எங்கு வெடித்தாலும் அது அக்குரணையில் வெடிக்காது.

    ReplyDelete

Powered by Blogger.