157 பேருடன் சவூதிக்கு பறந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் கோளாறு - கட்டுநாயக்கவில் மீண்டும் தரையிறங்கியது
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சவூதி அரேபியாவின் டமாம் நோக்கி இன்று (14) மாலை புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் ஹைட்ரொலிக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதன் விமானி 02 மணி 10 நிமிடங்களுக்குப் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீண்டும் விமானத்தைத் தரையிறக்கினார்.
146 பயணிகள் மற்றும் 11 பணியாளர்கள் உட்பட 157 பேருடன் பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யூஎல் 1263 என்ற ஏ-320 ரக விமானமே கட்டுநாயக்கவுக்குகு திரும்பியது.
இன்று (14) மாலை 5.45 மணிக்கு கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்ட விமானத்தை இரவு 07.55 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானி தரையிறங்கினார்.
தற்போது பயணிகளை வேறொரு விமானத்தில் டமாமுக்கு திருப்பி அனுப்பும் பணியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஈடுபட்டுள்ளது.
ரி.கே.ஜி.கபில
Post a Comment