Header Ads



புதிதாக திருமணமானவர்களுக்கு காணி - ஜனவரி 1 முதல் பிரதேச செயலகங்களில் விண்ணப்பங்களை பெறலாம்


புதிதாக திருமணமான குறைந்த வருமானம் பெறும் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு 2000 காணிகளை பகிர்ந்தளிக்க காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

காணி அமைச்சின் செயலாளர் ஆர்.டி.ரணவக்க இதனை தெரிவித்துள்ளார்.

காணி ஆணையாளர் நாயகம் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை குறைந்த வருமானம் பெறும் இளைஞர் யுவதிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து பிரதேச செயலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.